Wednesday, March 7, 2012

TEENAGE AGONIES AND BEHAVIOURAL DISORDERS

டீன் - ஏஜ் மன அழுத்தமும் -  நடத்தை முரண்பாடும்  


SCHOOL MENTAL HEALTH  PROGRAMME
பற்றி  கல்வி அதிகாரிகளுடனும், பேராசிரிய மற்றும் ஆசிரிய பெருமக்களுடனும்  ஒரு குழந்தை மருத்துவ மற்றும் குழந்தை மன நல வல்லுநர்
என்ற அடிப்படையில் நான் அடிக்கடி  கருத்து பரிமாற்றம் செய்வது  வழக்கம்.
மேல் நாடுகளில் நான் பெற்ற அனுபவத்தை விட நம் நாட்டில் நடக்கும்
நிகழ்சிகள் என் திகைப்பை மிகவும் அதிகரிக்க செய்கின்றன.
குழந்தைகள் மற்றும் இளம் மாணவர்களின்
EMOTIONAL AND BEHAVIOUR MANAGEMENT
பற்றி இளம் மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்
பள்ளிகளில், கல்லூரிகளில் இலவச பயிற்சி வகுப்புகளை
HABIB CHILD AND TEENAGE CLINIC
சார்பில் இப்போது நடத்தி வருகிறோம். பெரும்பாலான பள்ளிகள்
மற்றும் கல்லூரிகள் இப்போது இதில் அதிக அளவில் ஆர்வம் காட்டுவது
அவர்களின் பொறுப்புணர்வை எடுத்து காட்டும் செயல் என்று,
நான் கருதுகிறேன். சமீபத்தில் கூட இந்த விழிப்புணர்வு முகாமை
சென்னையின் பிரசித்தி பெற்ற சில  பள்ளிகளில் நாங்கள் நடத்தினோம்.
பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மற்றும் இளம் மாணவர்கள்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து பரிமாற்றம் நிகழ்த்திய விதம்
அவர்கள் எந்த அளவிற்கு மன ரீதியாக,உடல் ரீதியாக,உணர்வு ரீதியாக
பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை உணர வைத்தது.
ரிலையன்சின் 'BIG FM - RADIO' ம் எங்களுடன் இணைந்து
குழந்தை பாதுகாப்பு பற்றிய கேள்வி-பதில் நிகழ்ச்சியை
முழு அளவில் ஒலி பரப்பியது.இந்த நிகழ்ச்சியை சென்னையின்
பிரபல primex scans and labs நிறுவனம் ஏற்பாடு செய்தது.
PARENT CIRCLE என்ற பிரபல  ஆங்கில மருத்துவ மாத இதழ் 
இது சம்பந்தமான எனது மருத்துவ பேட்டியை ஜனவரி மாத இதழில் 
விரிவாக வெளியிட்டது. 

சென்னையில் சமீபத்தில் நடந்த இந்த கொடுமையான சம்பவம்
பெற்றோர்களை,ஆசிரியர்களை,இளம் மாணவர்களை
ஏன் ஒட்டு மொத்த தமிழகத்தையே பெரும்  அதிர்ச்சிக்கு ஆளாக்கி விட்டது.


அளவுக்கு மீறிய மன உளைச்சலும், மன அழுத்தமும் இந்த
மாணவனை கொலை செய்யும் அளவுக்கு தூண்டியிருக்கிறது.
எல்லா பத்திரிகைகளுமே இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம்
கொடுத்திருபதின் காரணம் இந்த சம்பவம் ஆசிரிய-மாணவ உறவினை
பெரிதும் பாதிக்கும் என்பதால் தான்.



ஒழுக்கம் இல்லாத கல்வி கடிவாளம் இல்லாத குதிரை போன்றது.
கல்வியும்,திறமையும் ஒருவனை உயர்ந்த இடத்தில அமர்த்தும்.
ஆனால் ஒழுக்கம் தான் அவனை அங்கு நிலை நிறுத்தும்.
திறமை இருந்தும் ஒழுக்கம் இல்லையேல் உயர்ந்த பதவியில்
நீடிக்க முடியாது. தினத்தந்தி பத்திரிகை  இப்படி சொல்கிறது.

அடுத்து வரும் ஒரு செய்தி சுனாமி புயலையும் மிகைக்கும்
வண்ணம் தமிழகத்தையே புரட்டி எடுத்து விட்டது.
குழந்தைகளின் இருபது வருட இளமை காலங்கள் வீட்டிலும்,
பள்ளி மற்றும் கல்லூரிகளில் கழிகின்றன. பெற்றோர்களும், ஆசிரியர்களுமே
அவர்கள் வாழ்கையை  பயனுள்ள வழிகளில், வழி நடத்தி செல்லும் 
ஆசான்களாக திகழ்கின்றனர். அவர்களே ஒழுக்க கேட்டிற்கு வித்திட்டால்
இளைய தலைமுறை என்னாகும்.


37  வயது ஆசிரியை, 17 வயது மாணவரிடம் காதல் வயப்பட்டு
வீட்டை விட்டு ஓடி போய் விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த ஆசிரியை திருமணமானவர்,மேலும்  ஒரு குழந்தைக்கு தாய்.

நம் தமிழ் திருநாட்டில் தினசரி நடக்கும் இந்த அவலங்கள்
எந்த அளவுக்கு நமது கலாச்சாரத்தை சீரழித்து வருகிறது
என்பதை கிழ்காணும் VIDEO பார்த்து புரிந்து கொள்ளலாம்.


அதிர்ச்சி  செய்திகள் -   ஒரு தொகுப்பு

  

நாம் போற்றி பாதுகாத்து வந்த கலாச்சாரம், அன்பு,காதல்,திருமணம்,
ஒழுக்கம்,நடத்தை, மற்றும் குடும்ப உறவுகள் சீர்குலைந்து போக
காரணம் என்ன. சினிமாவா, டி.வி.யா,  இன்டர்நெட்டா அல்லது மொபைலா.

___________________________________________________________________


PARENT CIRCLE 
பிரபல ஆங்கில மருத்துவ மாத இதழில் 
 குழந்தை மருத்துவ நிபுணரும் - குழந்தை மன நல வல்லுனருமான
டாக்டர்.அபிபுல்லா அளித்த பேட்டி.




பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர்.அபிபுல்லா
BIG - FM  RADIO - தமிழ் அலை வரிசையில் CHILD-SAFETY 
முறைகள் பற்றி தமிழில் ஆற்றிய கலந்துரையாடலின்
ஒரு பகுதியை நீங்கள்  கேட்டு பயன் பெறலாம்.


  

No comments:

Post a Comment