Wednesday, January 25, 2012

OUR GREAT TEACHERS AND PROFESSORS

நமது ஆசிரியர்களும் -  பேராசிரியர்களும்



பண்பான ஆசிரியைகள் இது போன்ற தவறுகளை
துணிந்து செய்வார்களா?


பெண்கள் கல்லூரி பேராசிரியைகள் இளம் மாணவ
மாணவியருக்கு ஒரு நல்ல 'ROLE MODEL'
என்று சமூகம் கருதுகிறது.

இது எதனால்-எதனால் - எதனால்?



சமீபத்தில் மகாபாரதத்தில் நான் படித்த சம்பவம் ஓன்று என் நினைவுக்கு வருகிறது. பாரத போர் களத்தில் அர்ஜுனனின் அம்பு பட்டு மரண படுக்கையில் கிடக்கிறார் பீஷ்மர்.நினைத்த மாத்திரத்தில் உயிரை விடும் சக்தி பெற்றவர் அவர். இருந்தும் உயிர் போகவில்லை. மிகவும் வருந்திய அவர் இதற்கான காரணத்தை வியாசரிடம் கேட்டார்.வியாசர் சொன்னார் - பீஷ்மரே!..ஒருவர்தனது மனம்,சொல் மற்றும் செயலால் இன்னொருவருக்கு தீங்கு செய்யாவிட்டாலும், பிறர் செய்யும் தீய செயல்களை தடுக்காமல் இருப்பதும் கூட பாவம் தான். அதனால் தான் நீங்களும் கூட இந்த தண்டனையை அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னார்.

அது சரி... பீஷ்மர் செய்த அந்த தவறுதான் என்ன? துரியோதனன் அவையில்  பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரிந்த போது அவையில் பீஷ்மரும் இருந்தார். கண் எதிரே அநியாயம் நடந்தும் அதை தடுக்க முன் வரவில்லை. திரவுபதி அழுதபோது கண் இருந்தும் குருடனாக,காதிருந்தும் செவிடனாக, வாயிருந்தும் ஊமையாக பீஷ்மர் செயல் பட்ட விதம் அவர் நினைவுக்கு வந்தது. அதற்கான தண்டனை தான் உயிர் போகாமல் வேதனை அனுபவிப்பதும் அவருக்கு புரிய வந்தது.

இந்த கதைக்கும் அந்த செய்திகளுக்கும் என்ன தொடர்பு என்றால் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள தொடர்பு தான்.படித்த, பண்புள்ள ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் சமூகத்தின் ஒளி விளக்குகள். அந்த ஒளி மங்காமல் பாதுகாப்பது அவர்கள் கைகளில் தான் இருக்கிறது.




No comments:

Post a Comment