Friday, November 9, 2012

HASSAN AND HIS MISSION

ஹசன் அவர்களும் மக்கள் பணியும் 


பேராசிரியர் திரு முகமது ஹசன் அவர்கள் குமரி மாவட்ட 
மக்களுக்கு மிகவும் அறிமுகமானவர். திருவிதான்கோடு 
முஸ்லிம் கலைக் கல்லூரியின்  முன்னாள் முதல்வர் அவர்.
மென்மையான இதயத்துக்கு சொந்தக்காரர்.
மக்களின் அடிப்படை தேவைகளுக்கு அதிக 
ஆரவாரமின்றி குரல்  கொடுப்பவர்.
குமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 
ரயில் ஹால்ட் ஸ்டேஷன் ஒன்றை பார்வதிபுரத்தில் 
அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி  அதற்கான குழு 
ஒன்றை அமைத்து நீண்ட நாட்கள் போராடி வருபவர்.

 

இந்த ஸ்டேஷன் பார்வதிபுரத்தில் அமைய வேண்டும்
என்பதை வலியுறுத்தி வரும் 11-ம் தேதி காலை
10 மணி முதல் மாலை 4மணி வரை
பார்வதிபுரத்தில் முழு சத்தியாகிரக அற போராட்டம்
நடைபெற உள்ளது.இந்த மாபெரும் போராட்டத்திற்கு
பேராசிரியர் ஹசன் அவர்கள் தலைமை ஏற்கிறார்.
இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள்
தளவாய் சுந்தரம், சுரேஷ் ராஜன் மற்றும்
பொன் ராதா கிருஷ்ணன், ஹெலன் டேவிட்சன் எம்.பி,
முன்னாள் எம்.பி.ஆஸ்டின், பெல்லார்மின்,
எம்.எல்.எக்கள் பிரின்ஸ், ஜான் ஜேகப், புஷ்ப லீலா ஆல்பன்,
விஜய தாரணி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் முகமது
இஸ்மாயில், பெர்னார்ட், நூர் முகமது, லீமாரோஸ்,
நாகர்கோயில் நகராட்சித் தலைவி மீனதேவ்
உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
மக்கள் பாராட்டும் சிறந்த மக்கள் பணியை
அகிம்ஸா வழியில் சப்தமின்றி நடத்தி வரும்
பேராசிரியர் ஹசன் அவர்களுக்கு நமது 
உளமார்ந்த பாராட்டுக்கள்.
மேலும் பணி தொடர வாழ்த்துக்கள