Friday, November 9, 2012

HASSAN AND HIS MISSION

ஹசன் அவர்களும் மக்கள் பணியும் 


பேராசிரியர் திரு முகமது ஹசன் அவர்கள் குமரி மாவட்ட 
மக்களுக்கு மிகவும் அறிமுகமானவர். திருவிதான்கோடு 
முஸ்லிம் கலைக் கல்லூரியின்  முன்னாள் முதல்வர் அவர்.
மென்மையான இதயத்துக்கு சொந்தக்காரர்.
மக்களின் அடிப்படை தேவைகளுக்கு அதிக 
ஆரவாரமின்றி குரல்  கொடுப்பவர்.
குமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 
ரயில் ஹால்ட் ஸ்டேஷன் ஒன்றை பார்வதிபுரத்தில் 
அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி  அதற்கான குழு 
ஒன்றை அமைத்து நீண்ட நாட்கள் போராடி வருபவர்.

 

இந்த ஸ்டேஷன் பார்வதிபுரத்தில் அமைய வேண்டும்
என்பதை வலியுறுத்தி வரும் 11-ம் தேதி காலை
10 மணி முதல் மாலை 4மணி வரை
பார்வதிபுரத்தில் முழு சத்தியாகிரக அற போராட்டம்
நடைபெற உள்ளது.இந்த மாபெரும் போராட்டத்திற்கு
பேராசிரியர் ஹசன் அவர்கள் தலைமை ஏற்கிறார்.
இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள்
தளவாய் சுந்தரம், சுரேஷ் ராஜன் மற்றும்
பொன் ராதா கிருஷ்ணன், ஹெலன் டேவிட்சன் எம்.பி,
முன்னாள் எம்.பி.ஆஸ்டின், பெல்லார்மின்,
எம்.எல்.எக்கள் பிரின்ஸ், ஜான் ஜேகப், புஷ்ப லீலா ஆல்பன்,
விஜய தாரணி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் முகமது
இஸ்மாயில், பெர்னார்ட், நூர் முகமது, லீமாரோஸ்,
நாகர்கோயில் நகராட்சித் தலைவி மீனதேவ்
உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
மக்கள் பாராட்டும் சிறந்த மக்கள் பணியை
அகிம்ஸா வழியில் சப்தமின்றி நடத்தி வரும்
பேராசிரியர் ஹசன் அவர்களுக்கு நமது 
உளமார்ந்த பாராட்டுக்கள்.
மேலும் பணி தொடர வாழ்த்துக்கள 





Tuesday, July 10, 2012

JAYALALITHA AND THE TAMIL MUSLIMS

ஜெயலலிதாவும் முஸ்லிம்களும்

தமிழக அரசியலில் முஸ்லிம்களின் பங்கு என்பது ஆளும் அரசியலை அசைத்து பார்க்கின்ற 
அளவுக்கு வலிமை வாய்ந்த ஒரு பெரும் சக்தியாகும். இந்த உண்மையை எல்லா பெரிய கட்சி 
களும் தெரிந்து வைத்திருக்கின்றன.இந்த முஸ்லிம் சக்தியை ஒன்றிணைக்கும் பாலமாக  தோன்றியவை தான் தமிழகத்தில் நாம் இன்று காணும் சிறிய அல்லது பெரிய முஸ்லிம் பெயர் தாங்கிய அரசியல் இயக்கங்கள்.தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த முஸ்லிம் கட்சிகள் திராவிட அரசியல் இயக்கங்களையே சார்ந்து  இயங்கி வருகின்றன.தனித்து இயங்கும் நிலையில் இவை இல்லை. முஸ்லிம்  தலைவர்களும் தான் சேரும் அணியை பொருத்துமுஸ்லிம்களை,அந்த கட்சிகளுக்கு  ஒட்டுபோடவைக்க முயற்சிகள் மேற் கொள்கின்றனர்.தான் அணி சேர்ந்த கட்சி,ஆட்சிக்கு வந்தால் இந்த குட்டி முஸ்லிம்  தலைவர்களுக்கு சில பதவிகளும்,சில சலுகைகளும் கிடைத்து விடுகின்றன. எதிர்பார்த்த  பதவி கிடைக்காவிடின் இந்த தலைவர்கள் கட்சியை, அடுத்த தேர்தலுக்குள் மாற்றி  விடுகின்றனர்.பெரிய கொள்கைகள்  எதுவும் இல்லாததால்,பிற கட்சிகளின் கொள்கைகளை  இவர்கள் அப்படியே ஏற்று கொள்கின்றனர்.சில நேரங்களில் தேர்தல் வெற்றி கருதி பெரிய  கட்சிகளின் சின்னங்களில் நின்று வெற்றி பெற்று விடுகின்றனர்.இப்போதுள்ள முஸ்லிம்  தலைவர்கள் எவரையும் குறை சொல்வது அல்லது குறை  காண்பது என் நோக்கமல்ல. உண்மை நிலையை மக்களுக்குஎடுத்துரைப்பது ஒன்றே என் நோக்கமாகும். மாநில ஹஜ் கமிட்டி, மாநில வக்ப்  வாரியம் போன்ற அமைப்புகளில், அதிக
ஆண்டுகள்,உறுப்பினராக பணி புரிந்த அனுபவம் எனக்கு உண்டு. முஸ்லிம் மேல் தட்டு மனி-
தர்கள் பலரை இந்த கால கட்டங்களில் நான் அறிந்ததுண்டு. அவர்களோடு நெருங்கி பழகியதும் 
உண்டு. இவர்களில் பலர், முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களை பற்றி நல்ல கருத்து  கொண்டவர்களாக இல்லை. அவர்கள் கூறும் சில  கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை 
என்றாலும் சாமானிய முஸ்லிம் சமுதாயம் இவர்களால் அடைந்த பயன், எதவும்  இல்லை என்ற பொதுக் கருத்து ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளது  என்பதே என் கருத்தாகும். 

இன்றைய  தமிழகத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ்
இயக்கத்தில் அதிகம் உள்ளனர். முஸ்லிம் அரசியல் கட்சிகளை விட மாநில கட்சிகளே இவர்களை  மிகவும் கவர்கின்றன. பாமர முஸ்லிம் ஏழ்மை நிலையில் இருப்பதால் இவனால் பிரபலமான முஸ்லிம் தலைவர்களை எளிதில் சந்திக்க முடிவதில்லை. மேடைகளில் "கை அசைக்கும்" தலைவர்களாக இருப்பதையே இவர்களில் பலர் எதிர் பார்கின்றனர். அரசியல் கொள்கைகளை சொல்லி முஸ்லிம் இளைனர்களை கவர இயலாது என்பதலாயே "இஸ்லாமிய கருத்துகளை சொல்லி அரசியல் ஆதாயம் தேடும் போலி அரசியல்வாதிகள்" தமிழகத்தில் இப்போது மிகவும் பெருத்து விட்டனர். இந்த போலி தலைவர்களால் சாதாரண முஸ்லிம்களுக்கு எந்த பலனும் இல்லை என்பதை முஸ்லிம் இளைனன் உணர வேண்டும். காயிதே மில்லத் போன்ற  ஒப்பற்ற உயர்குணம் கொண்ட உயர்ந்த மகான்கள் இப்போது நம்மிடையே இல்லை. பேச்சிலும் செயலிலும் நேர்மையை கைக்கொண்ட அந்த உத்தமர்கள் போல் உயர்ந்த 'மாடல் தலைவர்கள்'  இன்றைய முஸ்லிம் அரசியலில் இல்லை.
இஸ்லாமிய கொள்கைகள் தமிழக அரசின் கொள்கைகள் இல்லை.
மதுவை இவர்களால் ஒழிக்க இயலாது.
தனி மனித ஒழுக்கம் பற்றி அரசு சட்டம் இயற்ற இயலாது.
ஒழுங்கீனம் கவனத்திற்கு வந்தால் மட்டுமே
அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
தனி முஸ்லிம் மனிதன் வாழ்வில் அரசு 
எப்போதும் தலை இடுவது இல்லை.
ஈமான்-இஸ்லாம் பற்றி
அரசுக்கு கவலை இல்லை.
இவை ஒரு முஸ்லிமின் தனி உடைமை.
தொழுகை, நோன்பு இவை உடல் சார்ந்தவை.
ஜகாத் பொருள் சார்ந்தது.
ஹஜ் கடமை வசதி - வாய்ப்பு மற்றும்
உடல் ஆரோக்கியம்,ஆன்மா சார்ந்தவை.
இந்த தனி கடமைகளை நிறைவு செய்ய
ஒரு முஸ்லிமுக்கு அரசும் தேவை இல்லை,
முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தேவை இல்லை.
சாதாரணமாகவே பெரும்பாலான முஸ்லிம்கள்
உலக வாழ்க்கை சுகங்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்காதவர்கள். மறு உலக வாழ்க்கையில்  அதிக
நாட்டம் உள்ளவர்கள். இதை தெளிவாக புரிந்து கொண்ட
கிரிமினல் முஸ்லிம் அரசியல் வாதிகள்
முஸ்லிம்களை தவறான பாதைக்கு வழி நடத்தி செல்கின்றனர்.
இதனால் செய்யாத பல குற்ற வழக்குகளில் சிக்கி இளைஞர்கள் வாழ்வை
தொலைக்கிறார்கள். இவர்களை காப்பாற்ற எந்த அரசியல்
கட்சிகளும் முன்வருவதில்லை. பல முஸ்லிம் குடும்பங்கள்
இதனால் சீரழிந்து போய் விட்டன.
 உலகில் வாழும் எல்லா மனித இனத்துக்கும்
உணவு,உடை மற்றும் உறைவிடம் மிகவும் அவசியம்.
இதை விட மிகவும் அவசியம் 'பாதுகாப்பு'.
முஸ்லிம்களும்,முஸ்லிம் குடும்பங்களும் பாதுகாப்பான
சூழலில்  இப்போது இல்லை.முஸ்லிம்  M.L.A அல்லது M.P.களை 
நம்பினால் கை விட்டு விடுவதாகவும் மாற்று மத M.L.A, M.Pகளே 
உதவிக்கு வருவதாகவும் வேறு பட்ட கருத்துக்கள்  நிலவுகின்றன.
இதை ஆய்வு செய்வது நம் நோக்கமல்ல.
தமிழ்நாட்டு அரசியலில் கடந்த 50 வருடங்களுக்கும்  மேலாக 
காங்கிரஸ்,தி.மு.க மற்றும் அ.தி.மு.க  பிரமுகர்கள் அல்லது 
தொண்டர்களே அமைச்சர்களாக  வலம்  வருகின்றனர்.
முஸ்லிம் அமைப்புகளை சார்ந்தவர்கள் அல்லது முஸ்லிம் கட்சி 
நிர்வாகிகள் அமைச்சர்கள் ஆன வரலாறு இதுவரையில் இல்லை.
சிறிய பதவிகளுக்காக அலைவதைத் தவிர வேறு எதையும் 
இவர்கள் சாதித்ததாக  தெரியவில்லை.
தி.மு.க அல்லது அ.தி.மு.க- வை சுற்றியே இவர்கள் 
வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
கலைனர் முஸ்லிம்களின் நண்பராக இருக்கலாம், ஆனால்
ஜெயலலிதா முஸ்லிம்களின் எதிரி அல்ல என்பதே என் கருத்து.
கிருத்துவ தலைவர்கள் போல் முஸ்லிம் அறிஞர்கள் எவரும்
இவரை சந்திக்க முயல்வதில்லை. முயன்றால் முஸ்லிம்கள்
முன்னேற்றத்துக்கு இவர் மிகவும் பயனுள்ள பல நல்ல
காரியங்களை விரைவில் செய்து தருவார் என்பது
எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக, முதன் முறையாக
பதவி ஏற்ற நேரம் அது. தினத்தந்தி பத்திரிகை என்னிடம்
அவர் பற்றி ஒரு கட்டுரை தருமாறு என்னை கேட்டது.
ஜெயலலிதா பற்றி நான் எழுதிய அந்த கட்டுரையை
என் நண்பர்கள் பலரும் விரும்பியதின் பேரில்
இங்கு பதிவு செய்வதில் மிகவும் மகிழ்கிறேன்.



  




Friday, June 22, 2012

MARRY TO DIVORCE

விவாக - ரத்தாகும் திருமணம்

சென்னையில் விவாக-ரத்தாகும் திருமணங்களின் எண்ணிக்கை
கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது மிகவும்
கவலை அளிக்கும் விஷயம்.
கணவன் மனைவி இருவரும் சம்மதித்து பிரிவதென்று
முடிவு எடுத்து விட்டால் விவாக-ரத்து பெறுவது
மிகவும் எளிது.
விவாக-ரத்து கேட்பவர்களில் பெரும்பாலானவர்கள்
மிகவும் இளம் வயதினர்.
அதிகம் பேர் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
தற்போது 25 சதவீதம் திருமணங்கள்
விவாக-ரத்தில் முடிகின்றன.
கேரளத்துக்கு பின்னர் தமிழ்நாடு
இதில் முன்னிலை வகிக்கிறது.
இதில் படித்தவர்கள் அல்லது படிக்காதோர்
என்ற பாகுபாடு இல்லை.
காதல் திருமணங்கள் தான் என்றில்லை
பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணங்களும்
இப்போது விவாகரத்தை நோக்கியே அடிஎடுத்து
வைக்கின்றன.காரணம் புரியாமல் நீதி அரசர்களும்
சமூக ஆர்வலர்களும் திகைக்கின்றனர்.
இதனால் குடும்பங்கள் பாதிப்பதை விட
தம்பதியினரின் குழந்தைகள் தான் அதிகம்
பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இந்த பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள்
தன்னம்பிக்கை இழந்தவர்களாகவும் மனச்சோர்வால்
ஒரு வித பயத்துடனும் மன உளைச்சலுடனும்
பாதுகாப்பற்ற சூழலில் வாழும் நிலைக்கு
தள்ளப்படுவதால் அவர்களின் வாழ்க்கை தரமும்
சிதைந்து சீர் கெட்டு விடும்.
மாறி வரும் நவீன புதுமை உலகில்
திருமணம் ஒரு கேள்விக்குறி ஆகிவிட்டது.
திருமணம் ஆகாமலே சேர்ந்து வாழும் உரிமை
இதை இன்னும் எளிதாக்கி விட்டது.
 திருமணம் ஒரு புனித பந்தம் ,அது கருத்து ஒருமித்து வாழ 
வகை செய்யும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் என்ற கருத்து 
தம்பதியர் இடையே ஏற்படுமானால் விவாக-ரத்து 
தவிர்க்க படலாம்.விரிசல் சீர் படலாம்.
அழகுக்காக செய்யும் திருமணம் 
அழகு குறைந்தால் மாறி விடும்.
பணத்துக்காக செய்யும் திருமணம் 
பணம் போனால் பறி போய் விடும்.
பதவிக்காக செய்யும் திருமணம் 
பதவி போனால் பறந்து விடும் 
புகழுக்காக செய்யும் திருமணம் 
புகழ் குறைந்தால் மறைந்து விடும் 

"கல்யாணம்,கச்சேரி,கொண்டாட்டம்  எல்லாமும் வேடிக்கை நமக்கு 
அதில் வேறென்ன இருக்கு - டேக் இட் ஈஸி"
நடிகர் கமலஹாசன் ஒரு படத்தில் பாடி நடிப்பார்.
இந்த கருத்து உள்ளவர்கள் திருமணம் புரிந்து 
கொள்ளாமல் இருப்பது இன்றைய கால கட்டத்தில் 
மிகவும் நன்மை பயக்கும்.


BELIEVE THAT YOU CAN'T DIVORCE YOUR PARENTS OR CHILDREN
IT IS BETTER TO DIVORCE  BEFORE MARRIAGE THAN AFTER MARRIAGE.
IT IS FAR BETTER TO DIVORCE
BEFORE BEARING CHILDREN THAN
AFTER CHILDREN ARE BORN.
LOVE IS POSSIBLE WITHOUT PARENT'S CONSCENT
SEX IS POSSIBLE WITHOUT PARENT'S CONSCENT
MARRIAGE IS NOT POSSIBLE WITHOUT PARENT'S CONSCENT.
AFTER ALL, YOU ARE NOTHING BUT
THE BLOOD, BONE AND FLESH OF YOUR PARENTS.
LIVING-IN-ARRANGEMENT MAY GIVE
SHORT-TERM RELIEF, BUT
LONG-TERM GRIEF.
IF THE INTENSION  OF THE MARRIAGE IS TO DIVORCE
EVEN GOD CAN'T PREVENT IT.



Tuesday, June 19, 2012

ABDUL KALAM - A SAINT OR A SCIENTIST

அப்துல் கலாம்

விஞ்ஞானி ஆன ஒரு ஞானி


அப்துல் கலாம் -  இந்த மனிதரை பற்றிய எனது கருத்துக்களை அல்லது எண்ணங்களை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பல முறை நான் விரும்பியதுண்டு.சில நண்பர்களுக்கு என் கருத்துக்களில் உடன்பாடு இல்லை என்பது எனக்கு தெரியும்.இந்த மாமனிதர் என்னை கவர்ந்து விட்டவர் என்ற காரணம் ஒன்றே இவரை பற்றி நான் எழுதுவதற்கு காரணமாக அமைந்தது என்று சொன்னால் அது மிகை அல்ல.

ஒரு மனிதனை பற்றி எழுதுவது என்றால் அவனால் இந்த மனித சமுதாயம் பயன் பெற்று இருக்க வேண்டும், அல்லது தான் வாழும் காலத்தில் மக்களுக்கு நல்ல பயனுள்ள கருத்துக்களை - மக்களின் வாழ்க்கை தரும் உயர்வு பெரும் நல்ல செயல்களை அவன் செய்திருக்க வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினரின் நாயகனாக, ஒரு 'ரோல் மாடலாக' இந்த முதிய இளைனர் விளங்குகிறார் என்பதே அவர் செய்து வரும் நற் செயல்களுக்கு ஒரு நற் சான்று.

ஒரு எளிய முஸ்லிம் தமிழ் குடும்பத்தில் பிறந்து ஒரு நாடறிந்த விஞ்ஞானியாக தன்னை உயர்த்திக்கொண்ட வரலாறு பற்றி நான் இங்கு விவரிக்க போவதில்லை. தன்னிகரற்ற அறிவியல் சாதனைகளால் 'பாரத ரத்னா' என்ற உயர் தேசிய விருதினை பெற்றது கூட கலாமை பொறுத்த வரையில் ஒரு பெரும் சாதனையில்லை. விண் விளி சாதனைகள் நிகழ்த்தி
"அக்னி நாயகனாக" அவர் உலா வந்தது கூட அவரை பொறுத்த வரை ஒரு சாதாரண நிகழ்ச்சியே ஆகும்.

அசாதாரமான  சாதனைகளை உலகின் முன் நிகழ்த்தி காட்டிய இந்த அசாதாரமான மனிதன்  தன்னை எப்போதுமே ஒரு  சாதரணமான  மனிதனாகவே  காட்டி கொண்ட  விதம்  என்னை  பல முறை வியக்க வைத்ததுண்டு. சிறிய  வெற்றிகளுக்கு  எல்லாம்  விழா  எடுத்து  மகிழும்  இக்கால  சூழலில்  அபாரமான  அறிவியல்  சாதனைகளை  நிகழ்த்தி  காட்டிய  இந்த  "வெற்றியின் சிகரம்" எப்போதுமே  தன்னை  வெளி உலகுக்கு  அறிமுகம்  செய்து  கொள்ள  ஒரு போதும்  விரும்பியதில்லை.

பதவிகளை  தேடி  அலையும்  இவ்வுலகில்  இந்தியாவின்  உயர் பதவி  இவரை  வலிய  தேடி வந்து  அணைக்க  இருந்த போது, அதன்   செயலை எண்ணி  கலாம்  மிகவும்  நாணம்  அடைந்தார். அன்றைய  பாரத  பிரதமர்  அவர்களே  இவரை  தேடி  வந்து  "ஜனாதிபதி  பதவி" யை  ஏற்று கொள்ளும்படி  வற்புறுத்திய  போது  இவர்  அதை  ஏற்க  மிகவும்  தயங்கினார்.  அழகிய  பெண்களை  கூட ஏறெடுத்து  பார்க்க  தயங்கும்  கலாம்  அவர்களை  'பதவி  தேவதை' தன்  பொன் கரங்களால்  ஆரத்தழுவி  தன்னுடமையாக்கிக் கொண்டாள். ஜனாதிபதி  பதவி  இவரால்  தரம் உயர்ந்தது. பதவி  சுகத்தை  நாடாத  கலாமை கண்டு  பதவி  தேவதை  மட்டுமல்ல - இந்த  நாடே வியந்தது. அரண்மனையின்  நீண்ட  கதவுகள்  சாதாரண  மக்களுக்காக  திறந்து  விடப்பட்டன. ஜனாதிபதி  மாளிகை  சாதாரண  மனிதர்களும்  உலா  வரும்  எழிலகம்  ஆக  உரு மாறிற்று. மக்கள் நாயகனே  மக்களில்  ஒருவனாக  காட்சி  அளித்தது  கண்டு  நாடே வியந்தது. யார் வேண்டுமானாலும், எப்போது  வேண்டுமானாலும்  ஜனாதிபதியை  சந்திக்க  முடியும்  என்ற  கலாமின்  அறிவிப்பு  அற்ப பதவிகளில்  இருப்போரையும்  அதிர வைத்தது. பதவி  சுக வாசிகள்  இந்த அறிவிப்பினால்  மிரண்டு போனார்கள். "மக்கள் எவ்வழி, மன்னன்  அவ்வழி" என்ற பொன் மொழிக்கு  இணங்க, ஜனாதிபதியே  மக்களை  நோக்கி  நடந்த காட்சி  இந்திய  வரலாற்றில்  முதல்  முதலாக  அரங்கேறியது. நேற்று பெய்த மழையில்  இன்று  வளர்ந்த  காளான்  தலைவர்கள்  எல்லாம்  கலாமை  பார்த்து  பயந்தார்கள். எங்கே, மக்களும்  தங்களை  கலாம்  போல்  இருக்க  சொல்வார்களோ - ஒரு வேளை  அப்படி  சொன்னால் என்ன  செய்வது  என்று  மூளையை  பிசைந்தார்கள். அப்துல் கலாம் - இந்திய  திரு நாட்டிற்கு  கிடைத்த  ஓர்  அற்புத தலைவர்.

கலாம் மிகவும் எளிமையாக இருப்பதற்கு காரணம் என்ன? அவர் "ஜனாதிபதி" போல் வேஷம் கூட போடவில்லை. சாதாரண  கலாமாகவே  தன்னை  எண்ணிக்கொண்டார். ஏன் - ஒரு விஞ்ஞானி  என்று கூட தன்னை பெருமைப்பட அவர்  கூறி கொண்டதில்லை. பதவிகளின்  பெயரால் என்றுமே அவர் தன்னை அடையாளம் காண  முயன்றதில்லை.அவரின்  எளிமை கோலத்தை கூட கிண்டல் செய்து  மகிழ்ந்தவர்கள் பலர். அவரின் நடை உடை பாவனைகளை கேலி சித்திரமாக்கி பிரசுரித்து மகிழ்ந்தவர் சிலர். தன்னை அறிந்து கொண்டவர்கள் பிறரின் விமர்சனம் கண்டு மனம் கலங்குவதில்லை. கலாம் 21-ம் நூற்றாண்டின் "சாக்ரடீஸ்" ஆக வலம் வந்தார். இளைனர்களை தட்டி எழுப்பினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் இளைஞர்கள்,மாணவர்கள் அதிக அளவில் குவிந்தனர். அவரின் கருத்துரைகளை ஆவல் பெருக கேட்டு மகிழ்ந்தனர். கோடிக்கணக்கான இளைனர்களின் மாடல் தலைவனாக அவர் உயர்ந்தார். இளைனர்களுக்கு சிந்திக்கவும் ஆக்க பூர்வமான கனவுகளை வளர்த்து அதை செயல் படுத்தும் கலைகளையும் கற்றுக் கொடுத்தார். முன்னாள்  ஜனாதிபதி என்ற போலி அந்தஸ்துக்குள் தன்னை அடைத்துக் கொள்ள விரும்பாமல் கலாமாகவே மக்கள் மத்தியில் வலம் வந்தார். நம் நாட்டு கல்லூரி,பல்கலைகழகம் என்றில்லாமல் வெளி நாட்டு கல்லூரிகளும்,பல்கலைகழகங்களும் இவரை போட்டி போட்டு அழைத்து கெளரவித்தன. இவர் வாங்கி குவித்த "டாக்டர்" பட்டங்களுக்கு அளவே இல்லை. கலாம் என்றால் கர்வம் இல்லாதவர் என்பது மக்களின் ஒரு மித்த கருத்தாகும்.

முஸ்லிம்கள் மத்தியில் கலாம் பற்றி பல்வேறு கருத்து பேதங்கள் உண்டு. அது பற்றி விளக்க முற்படுவது என் நோக்கமல்ல. பி.ஜெ.பி.தேர்வு செய்வதால் மட்டுமே இவர் முஸ்லிம்களுக்கு எதிரி ஆகி விட முடியாது. இது சுயநலம் கொண்ட சில முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கடைந்தெடுத்த பெரும் பொய் கூற்றாகும். இந்திய அரசியலில் கலாம் போன்ற நேர்மையான முஸ்லிம்கள் பெரிய பதவிகளை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த "சந்துமுனை சிந்துபாடிகள்" முஸ்லிம் அமைப்புகள் என்ற பெயரில் இல்லாத-பொல்லாத அவதூறுகளையெல்லாம்  முனைந்து நின்று பரப்ப துணிவது கண்டிக்கத் தக்கது. கலாம் இந்த அவதூறுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஓர் உயர்ந்த மனிதர்; மனிதப் புனிதர்.இளகிய மனமும்,ஏழைக்கு இறங்கும் மனப்பாங்கும் கொண்ட ஓர் ஏழை பங்காளர். தன் பெயருக்கு தகுந்தாற்போல் 'திருமறையை' நன்கு கற்றுணர்ந்து அதை வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஒரு சிறந்த முஸ்லிம் அவர். விஞ்ஞானியாக இருந்தும் ஞானி போல் வாழ்பவர்.

இந்திய திருநாடு இன்று ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நேர்மையான நல்ல தலைவர்கள் இன்று நம்மிடையே இல்லை. இருக்கும் ஒரு சில தலைவர்களும் நேர்மையானவர்கள் என்று சான்று பகரும் நிலையில் இல்லை. சினிமாக் காரர்களின் கைகளில் அரசியலும் நாடும் சிக்கி சீரழிந்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரையில் அரசியல் தலைவர்கள் எல்லாம் சினிமா நடிகர்களாக அல்லது திரை  கதை-வசன கர்த்தாக்களாக இருப்பவர்களே உள்ளனர். அரசியல் தலைவர்கள்  எல்லோரும் நம் தமிழ் நாட்டில் சினிமா உலகில் இருந்தே வருகிறார்கள். பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் சினிமா கலைனர்களே. தமிழ் நாட்டை சேர்ந்த  கலாம் ஒரு சினிமா கலைனர் அல்ல. நேர்மையான  முதிர்ந்த  'நேஷனல்  லீடர்'. அவரே மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பு வகிக்க வேண்டும்  என்று பொறுப்புள்ள  அரசியல் கட்சி பிரமுகர்கள்  அனைவரும் வேண்டுகோள் விடுத்தும், பதவி வலிய வந்து  மீண்டும் வீட்டு  கதவை பலமுறை  தட்டியும், ஆசைக்கு பணியாமல் சொந்த மன சாட்சிக்கு பயந்து, பதவியை தூக்கி எறிந்த கலாம் என் கண் முன் உயர்ந்து நிற்கிறார். 
சங்கு சுட்டாலும் வெண்மை தரும் 


Monday, June 18, 2012

MARRIAGES ARE MADE IN HEAVEN

திருமணங்கள் சொர்க்கத்தில்

நிச்சயக்கப்படுகின்றன

இந்த பொன்மொழி உண்மையா அல்லவா என்பது
நம் விவாதமல்ல; ஆனால் இது பொன் மொழியும் அல்ல
பழமொழியும் அல்ல என்பதே நம் கருத்து.
இப்போது திருமணங்கள் இன்டர்நெட் மூலம்
நிச்சயம் செய்யப்படுகின்றன என்பதே முழு உண்மை.
திறமையும் சற்று ஏமாற்று திறனும் இருந்தால் ஒரு
நோஞ்சான் கூட எத்தனை பெண்களை வேண்டுமானாலும்
இப்போது மணம் புரிய இயலும்.
அமீர்கான் என்ற ஒரு மும்பை பேர்வழி 50 பெண்களுக்கு மேல்
ஏமாற்றி திருமணம் புரிந்து கொண்டான் என்பது செய்தி அல்ல
ஒரு முழு அதிர்ச்சி. இவன் பேச்சில் மயங்கி இவனை
மணந்தவர்கள் 150- கும் மேல் நீளும் என்கிறது இன்றைய செய்தி.
பெரும்பாலான பெண்கள் மெத்த படித்தவர்கள்.
சில பெண்கள் பெற்றோரையும் புறம் தள்ளி விட்டு 
இவன் பேச்சில் மயங்கி திருமணம் புரிந்து, ஹனிமூன் முடிந்து 
கணவன் - மனைவியாய் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது 
நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது 
முழுக்க முழுக்க உண்மையாகும்.
மணம் புரிய இருக்கும் பெண்களை இவன் தேர்வு 
செய்யும் முறை மிகவும் அலாதியானது.
குடும்ப பிரச்சினை உள்ள பெண்கள் 
குடும்ப சுமை உள்ள பெண்கள் 
பெற்றோரை விட்டு விலகி இருக்கும் பெண்கள் 
கணவனால் கை விடப்பட்ட பெண்கள் 
இளம் விதவை பெண்கள் 
சற்று வயதான பணக்கார பெண்கள் 
எளிதில் இவன் விரிக்கும் வலையில் வீழ்கின்றனர்.
இவன் வலை விரிப்பது இருக்கட்டும் 
இவன் வலையில் இந்த பெண்கள் எப்படி இவ்வளவு 
எளிதாக விழுகின்றனர்.
வாழ்வு கேள்விக்குறியாகும் என்று உள்ளுணர்வு உணர்த்தியும் 
இந்த விபரீத விளையாட்டில் இந்த இளம் பெண்கள் 
இறங்குவது ஏன்?
தேவை ஒரு ஆண் துணை என்பதாலா?
வெறுமையாகிவிட்ட தங்கள் வாழ்வில் வசந்தம் 
மீண்டும் வீசும் என்பதாலா?
கேள்விக்குறி ஆகிவிட்ட தங்கள் வாழ்க்கையை 
மீண்டும் சீர் செய்ய இயலும் என்பதலா?
பிரிந்து வாழும் கணவனை தண்டிப்பதற்காகவா?
அல்லது எளிதில் விவாக ரத்து பெற்று 
விடலாம் என்ற தைரியத்தாலா ?
திருமணத்தை ஒரு வேடிக்கை - விளையாட்டாய் 
எடுத்து கொண்ட காரணத்தாலா?
"காதல் என்பது எது வரை 
கல்யாண காலம் வரும் வரை, 
கல்யாணம் என்பது எது வரை 
கழுத்தில் தாலி விழும் வரை"

எங்கேயோ, எப்போதோ கேட்ட பாடல் வரிகள் 
அர்த்தம் அன்று புரியவில்லை 
இன்று புரிகிறது.

 

OVER - SEXED WIFE AND THE MURDERER HUSBAND

செக்ஸ் உணர்வு அதிகம் கொண்ட மனைவியும் கொலை வெறி கொண்ட கணவனும்

தனி மனித ஒழுக்கம் சமூகத்தை மேம்படுத்தும் என்பது நியதி.
ஆனால் தனிமனித ஒழுக்க கேடு எந்த அளவுக்கு ஒரு குடும்பத்தை 
பாதித்து கொலை செய்யும் அளவுக்கு ஒரு கணவனை தூண்டியிருக்கிறது 
என்பதே இந்த செய்தியின் சாரம். தமிழகத்தின் கலாச்சாரமும் 
பண்பாடும் சமீப காலங்களில் மிகவும் தரம் தாழ்ந்து விட்டது என்பது  
சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கருத்தாகும்

காதலித்து கரம் பிடித்த இளம் மனைவி அவள்.
காம மோகமும் அதிகம் கொண்டவள்.
மொபைலில் ஆண்-பெண் உறவு படங்களை அதிகம் 
பார்த்து ரசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவள்.
பார்த்து ரசித்த சம்பவங்களை தன் காதல் கணவனோடு 
பங்கிட்டு கொள்ள துடிக்கும் இளம் மனைவி.
மனைவியின் இளமை துடிப்புக்கு ஈடு கொடுக்க இயலாமல் 
தவிக்கும் வீரியம் குறைந்த ஆண் மகன் இவன்.
மனைவியின் அபரிதமான காம லீலைகளுக்கு  தீனி போட 
இயலாத கணவனை "ஆண்மையற்றவன்" என்று மனைவி 
தீர்ப்பு வழங்கினால் இவன் என்ன செய்வான்.
கணவனை ஏளனம் செய்த மனைவி தன் அந்தரங்க 
தேவைகளை நிறைவு செய்ய வேறு ஒருவனை 
தேர்வு செய்தாள். புதியவனோடு சல்லாபம் செய்வதையே 
தினமும் கடமையாக கொண்டாள் இவள். 
பாதை மாறி செல்லும் மனைவியை திருத்த முயன்றான் இவன்.
அவளோ கேலி செய்தாள் - வசை பாடினாள்.
எதுவும் இனி செய்ய இயலாது - மனைவியை மாற்ற இயலாது 
என்று கண்டு கொண்ட கணவன் 
மனைவியை ஒரு நாள் ஆசை ததும்ப அழைத்தான்.
புதிய சுகம் தருவான் "கணவன்" என்று வந்தாள் அவள்.
சொர்க்கத்தை காட்டுகிறேன் என்று அவன் சொன்னதை 
பேதை இவள் நம்பினாள். தன் மானத்தை காக்க தன் 
கரங்களினாலேயே தன் காதல் மனைவியை கழுத்தை 
நெரித்து கொன்றான் இவன்.
இது சினிமா விமர்சனம் அல்ல.
நம் தமிழ் நாட்டில் நடந்த உண்மை சம்பவம்.
இரு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி.
இந்த வினோத விபரீதங்கள்
எதனால் - எதனால் - எதனால்?

இப்போது செய்தியை படித்து பாருங்கள்  

  

Sunday, June 10, 2012

"FALL" - IN - LOVE

 புதுமை  உலகில் 

காதல் - ஏமாற்றமா அல்லது  தடுமாற்றமா 

காதல்  புனிதமானது - களங்கம் அற்றது  என்ற சொல் எல்லாம் 
இன்று அர்த்தமற்று போய் விட்டது .
காதல் - காதல் - காதல், அது போயின் சாதல் - சாதல் - சாதல் 
என்று என்றோ ஒரு கவிநன் சொல்லி வைத்தான்.
அது எத்துனை உண்மை என்பது இப்போது தான் புரிகிறது.
காதலிப்பது - உடலின்பத்தை முழுக்க அனுபவிப்பது, பின் 
காதலியை அல்லது காதலனை கொன்று விடுவது என்பது 
இன்றைய இளைனர்,இளைனிகளின் கலாச்சாரமாகி விட்டது.
ஒரு பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் காதல் விஷயங்களை 
வெளியில் சொல்வதற்கு பெண்கள் கூச்சப்படுவர், தாய் - தந்தையரிடம் 
கூட அது பற்றி பேச தயங்குவர். ஆனால் இப்போது திருமணம் 
நிச்சயம் ஆன பெண்கள் கூட, தயங்காமல் காதலர்களுடன் 
ஓடி போய் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது சரியா அல்லது  தவறா என்ற விவாதம் தேவை அற்றது.
இது எதனால் என்பதே கேள்வி.












I thank "Thina Thanthi" because I have collected all these informations
from that daily only.
This informations reflect the cultural aspect of our society
to the external world

















Friday, June 1, 2012

DEAD WITH LOVE

THE LOVE-HATE RELATIONSHIPS

Reading news gives no thrill nowadays. killings and suicides never make people panic.
parents killing children, children killing their parents, wives killing their husbands,
husbands killing their wives, employers killing their servants,servants killing their
employers and lovers killing themselves  for the sake of love have become
common happenings in our day- to-day life.

"life has meaning only in death,
it is better to be killed by the loved one's than others"

PARENTS ARE KILLED BY THE SON


HUSBAND KILLED HIS WIFE BECAUSE SHE IS AGED


A WIFE WAS BURNT TO DEATH BY HER HUSBAND


A LOVER COMMITTED SUICIDE WHEN MARRIAGE FAILED


HUSBAND COMMITTED SUICDE WHEN WIFE SCOLDED HIM


CAR DRIVER KILLED THE OWNER UNDER THE
INFLUENCE OF ALCOHOL







Thursday, April 5, 2012

TEENAGE STUDENTS AND THE SUICIDE

இளம் மாணவர்களும் தற்கொலையும்

இப்போது மாணவர் தற்கொலை பற்றிய செய்திகள்
பத்திரிகைகளில் அதிக அளவில் வெளியாகின்றன.
இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால்
கீழ் குறிப்பிடும் நிகழ்வுகள் அனைத்தும் ஒரே நாளில்
ஒரே நாளேட்டில் வெளிவந்த செய்திகளாகும்


இந்த மாணவர் பி.இ. மெக்கானிக் படித்து வந்தவர்.
20 பாடங்களில் தோல்வி அடைந்ததால் இந்த முடிவை
மேற்கொண்டதாக தெரிகிறது.


இவர் சட்ட கல்லூரி மாணவர். திருமணம் பிடிக்காமல்
போனதால் தற்கொலை முடிவை மேகொண்டதாக
தகவல் தருகிறது இந்த செய்தி.



சில மரணங்கள் இவரை நிலைகுலைய வைத்ததால்
இந்த துயர  முடிவை மேற்கொண்டு விட்டார்.


இந்த செய்திகளின் பின்னணியை வைத்து சென்னை ஐகோர்டில்
ஒரு வக்கீல் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இது
மிகவும் வரவேற்க தக்க ஓன்று. அவர் கூறுகிறார்.
"மாணவர்களுக்கு மன அழுத்தம்  அதிகம் ஏற்படுகிறது.
மாணவர்களிடம் சில ஆசிரியர்களின் நடத்தையும் மோசமாக உள்ளது"
நீதிபதிகள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க
உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.



தற்கொலை என்பது இளம் மாணவர் மத்தியில் ஒரு தொற்று நோய் போல் பரவி விட்டது. 21 - ம் நூற்றாண்டின் புது யுகத்தில், மாணவர்கள் சொல்லொணா மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்பது மிகவும் உண்மை. மொபைல், இன்டர்நெட், டிவி, சினிமா போன்றவை இவற்றை ஊக்குவிக்கின்றன. சினிமா காட்சிகளிலும், கற்பனையிலும் மிதக்கும் இன்றைய இளம் மாணவன் நிஜத்திற்கும், நிழலுக்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்க்கையை பாழ் படுத்துகிறான். நடிகர்களை தனது 'மாடலாக' எண்ணி தன் வாழ்க்கையையும் அவர்கள் போல் மாற்றி அமைக்க எண்ணுகிறான். நண்பர்களின் சகவாசம், அவர்கள் தரும் "instant advice" இன்றைய மாணவனை சில அவசர முடிவுகளுக்கு இழுத்து செல்கின்றன. காதல் தோல்விகள், பரீட்சை தோல்விகள், படிப்பில் பின் தங்குதல், படிப்பில் கவனமின்மை, சினிமா மோகம், இன்டர்நெட் மற்றும் "DRUG AND ALCOHOL ADDICTION" இன்றய இளைய தலைமுறையை சாவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றன. தோல்விகளை சமாளிக்க உதவும் 'மருந்து மாத்திரைகள்' சில நாளில் வலு இழந்து விடுவதால், மரணமே சிறந்த மாற்று மருந்தாக அவர்கள் மனதில் நிலைத்து விடுகிறது. இந்த அவசர முடிவுகள் பற்றி அவர்கள், தங்கள் பெற்றோர்களிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ கலந்து பேசுவதில்லை. இன்றைய பெற்றோர்களும் இது பற்றியெல்லாம் பெரிதாக கவலை கொள்வதில்லை. குழந்தைகளின் படிப்பை பற்றி மட்டுமே கவலை கொள்ளும் பெற்றோர், அவர்களின் மன சோர்வு பற்றியோ அல்லது மன அழுத்தம் பற்றியோ, அவர்களின் சொந்த மன போராட்டங்கள் பற்றியோ கவலை கொள்வதில்லை. சிறு பிரட்சினைகளுக்கு கூட வடிகால் தெரியாததாலேயே இந்த மாணவர்கள் இந்த விபரீத முடிவை மேற்கொள்கின்றனர். தீர்வுக்கான  எல்லா வழி கதவுகளையும் அடைத்து விடும் இவர்கள், 'தற்கொலைக்கான'  வாசலின் கதவுகளை மட்டிலும் மிகவும் அகலமாக திறந்து வைத்து கொள்கின்றனர். குழந்தைகளுக்கு முழு அளவிலான உடல் மற்றும் மன நல மருத்துவ பரிசோதனைகளை, சிறந்த குழந்தை மருத்துவரை கொண்டு சோதிப்பது மூலமும் அவர்களின் சிறந்த ஆலோசனைகளை கேட்டு பெறுவதன் மூலமும், குழந்தைகளின் இது போன்ற  துயர் முடிவுகளை ஓரளவுக்கு தடுத்து நிறுத்த இயலும்.



Wednesday, March 21, 2012

THE ART OF TEACHING LOVE - tamil

மன்மத கலைக்கல்வி


'மன்மத லீலையை வென்றார் உண்டோ'
ஒரு காலத்தில் பாகவதர் ஆண்களை குறிவைத்து பாடிய பாடல்
ஆண்களை கூட சற்று முகம் சுளிக்க வைத்தது.
"மன்மத லீலை" என்ற படத்தை, பாலச்சந்தர் எடுத்த போது கூட
நம் சமூகம் அவரை சாடியது. என்றாலும், தற்போது  கூடங்குளம் அணு உலை
செய்திகளை காட்டிலும் நம் மீடியாக்களை அதிகம் ஆக்ரமித்த செய்தி
நமது பெருமைக்குரிய ஆசிரிய சமூகத்தை சேர்ந்த ஒரு மூத்த ஆசிரியை 
குமுது அம்மையார் அவர்களை பற்றி வந்த செய்தியாகும்.
வயதுக்கு வராத ஒரு இள மாணவனும் இதில் சம்பந்த பட்டிருப்பதால் 
இந்த விஷயம் சற்று முக்கியத்துவம் பெறுகிறது.


37 வயது ஆசிரியை 17 வயது மாணவரை கடத்தி, காதல் வயப்பட்டு
உல்லாச கடலில் மூழ்கியது எப்படி. ஆசிரியை போலீசாரிடம் கொடுத்த
பரபரப்பு வாக்குமூலம், போலீசாரை மட்டுமல்ல, பொதுமக்களையும்,
ஆசிரிய பெருமக்களையும், தாய்மார்களையும், குறிப்பாக இள வயது
மாணவர்களையும் நிலைகுலைய செய்து விட்டது.

இந்தி ஆசிரியை அவர். திருமணமானவர்.ஒரு குழந்தைக்கு தாய். கணவனை பிரிந்து வாழ்பவர். இந்த குறிப்பிட்ட மாணவனை அவருக்கு மிகவும் பிடிக்கும். கட்டிபிடி காதலில் தொடங்கி, அந்தரங்கமாகி, கட்டில் கடந்து 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற நிர்வாண நிலைக்கு தங்களை உயர்த்தி கொண்டவர்கள்  இந்த காதலர்கள்.மாணவன் படிப்பதோ பிளஸ்-1 வகுப்பு. வயதோ 17 . ஆசிரியை சொல்கிறார்- "என் காதலனை பார்க்கும்போது,என்னை ஒரு 16  வயது மாணவியை போல் மனதில் எண்ணி கொள்வேன்,செக்ஸ் ரீதியாக இணையும் நிலையில் நான் பரவசம் எய்தியதுண்டு" சற்று குரூரமாக தோன்றினாலும் அவரது வாக்குமூலம் சமூக ஆர்வலர்களை எல்லாம் சிந்திக்க தூண்டாமல், செயல் இழக்கும் நிலைக்கு தள்ளி விட்டது. அவர் மேலும் தரும் தகவல் தமிழ் சமூகத்தை தலை கீழாக புரட்டி போட்டு விட்டது. அவர் சொல்கிறார்.
"எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை. எங்கள் காதலை வாழ விடுங்கள். இனி என் கணவர் எனக்கு தேவை இல்லை. என் இளம் காதலன் தான் எனக்கு வேண்டும்.வாழ்ந்தால் இனி அவனோடு தான் வாழ்வேன், இல்லையேல் செத்து மடிவேன்."
இளம் மாணவன் சொல்வதை இப்போது சற்று கேளுங்கள். "ஆசிரியை தான் என் உயிர் காதலி, அவரை திருமணம் செய்து வாழ என்னை அனுமதியுங்கள்.சட்டத்தை பற்றி எனக்கு கவலை இல்லை.இந்த உலகை பற்றி, பெற்றோர்,உற்றார்,உறவினர் பற்றி எனக்கு கவலை இல்லை. வாழ விடுங்கள், இல்லையேல் சாக விடுங்கள் அல்லது சாவிலாவது இனைய விடுங்கள்"


                                   
இந்த காதலனை அடைய கணவனை நிரந்தரமாக பிரிய தயாராக
இருப்பதாகவும், தன் ஒரே மகனையும் தன் தந்தையுடன் அனுப்பி விட
இருப்பதாகவும் இந்த வயது முதிர்ந்த காதலி சொல்கிறார்.


பொருந்தா காதல் உறவுக்குள் சிக்கிய இந்த புதுமை காதலர்களை
எப்படி மீட்பது என்பது தான் இருவர் குடும்பமும் கொண்டுள்ள கவலை.
ஆனால் ஜெயலில் இருக்கும் ஆசிரியை, எதையும் கண்டு கொள்ளாமல்
மிகவும் சந்தோசத்துடன் இருப்பதாகவே சிறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

மதவாதிகளை கேட்டால் 'கலிகாலம்' என்பர். அல்லது உலகம்
அழிவதற்கான காலம் நெருங்கி விட்டதின் அறிகுறி என்பர்.
மன நல வல்லுனரை கேட்டால் இது ஒரு சாதாரண
'SEXUAL PERVERSION'
உடல்,மன ரீதியான செக்ஸ் கிளர்ச்சி அல்லது எழுச்சி என்பர்.
மருத்துவரை கேட்டால்
SOME CHANGES IN THE BLOOD CHEMISTRY OR HORMONES
மூளையின் செக்ஸ் சென்டரில் ஏற்பட்ட மாறுதல் என்பர்.
செக்ஸ்சாலஜிஸ்ட்-ம் கேட்டால் கணவரோடு உறவு சரியாக இல்லாததால்
ஏற்பட்ட கோளாறு இது. மனைவியை திருப்தி செய்ய இயலாத கணவராக,
அவர் இருந்தால், இது போல் நிகழ வாய்ப்பு அதிகம். எனவே
இதில் பெரிய தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை என்று
மிகவும் எளிதாக சொல்லி விடுவார்.

ஆண் குழந்தைகள் சாதாரணமாகவே 'தாயன்புக்காக' ஏங்குவதுண்டு.
சில நேரங்களில் வெறுப்பை, குழந்தைகளின் மேல் திணிக்கும் சில
தாய்மார்களும் உண்டு. தாயின் அன்புக்காக ஏங்கி தவிக்கும் ஆண்
குழந்தைகள், தங்கள் மேல் பாசம் சொரியும் 'தாய் போன்ற' ,தாய் வயதை
ஒத்த ஆசிரியைகளிடம் தங்கள் மனக்குறையை வெளி இடுவது
உண்டு.இந்த நெருக்கம் சில வேளைகளில் காதலாக கனியவும் 
வாய்ப்பு உண்டு. அழகிய ஆசிரியைகள் இந்த சந்தர்பங்களை 
தவறாக பயன்படுத்தி, தங்கள் இச்சைகளை தீர்த்து கொள்வதற்கு 
இளம் மாணவர்களை தூண்டுவதும் உண்டு.

கலீல் ஜிப்ரான் ஒருமுறை சொன்னார்.
"பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றுங்கள்"
வயதான ஆசிரியைகளிடம் இருந்து இளம் மாணவர்களை 
காப்பாற்றுவது எப்படி. 




Friday, March 16, 2012

HOW TO SAVE THE CHILDREN FROM THEIR PARENTS

குழந்தைகளின் பெற்றோர்களிடம்  இருந்து
குழந்தைகளை பாதுகாப்பது எப்படி.


இப்போதெல்லாம் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பேசுவதற்காக
குழந்தை மருத்துவ நிபுணர் என்ற முறையில்
பெரும்பாலான கல்வி நிலையங்களில் என்னை 
பேசுவதற்கு அழைத்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சிறு குழந்தை சில நாட்கள் முன்பு ஒரு பழ துண்டை 
விழுங்கி, அது தொண்டையில் அடைத்து விட்டதன் காரணமாக குழந்தை
இறந்து விட்டது. இது சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் 
நடந்த சம்பவம். குழந்தைகளுக்கு இப்போது பாதுகாப்பின்மை 
மிகவும் அதிகரித்து விட்டது. குழந்தைகளை பாதுகாப்பவர்களே, 
குழந்தைகளின் எமனாக மாறி கொண்டு இருக்கிறார்கள்.

குழந்தையின்மை சிகிச்சைக்காக, சென்னையில் இப்போது அதிக 
அளவில் மருத்துவ மனைகள் பெருகி விட்டன. குழந்தை இல்லா
தம்பதியர் எப்படியும், எந்த முறையிலாவது ஒரு குழந்தையை பெற்று 
கொள்ள, துடித்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பெற்ற 
தம்பதியினரோ, அதை முறையாக பாதுகாக்க வழி தெரியாமல், 
குழந்தைகளை இழந்து விடுகின்றனர். சில நேரங்களில், சுயநலம் 
காரணமாக பெற்ற குழந்தைகளையும் கொன்று விடுகின்றனர். 




மேற்சொன்ன செய்தி 'தினதந்தி' பத்திரிகையில் வந்த தகவல்.
மதுவுக்கு அடிமையான குழந்தையின் தாத்தா தான், குழந்தையை
கடத்தி அதை வேறு ஒரு கும்பலுக்கு விற்க துணிந்தவர் என்று
அறியும்போது, ஒரு குழந்தை மருத்துவர் என்ற முறையில் மனம்
சற்று பேதலிக்கிறது. மருத்துவ சிகிச்சை பயனின்றி, குழந்தை
இறந்தால் கூட அதையும் சிகிச்சை அளித்த மருத்துவரின்
கவன குறைவு என்று சாடும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை
தாங்களே விலை பேசுவதை என்னென்று சொல்வது.




பிறந்து நான்கு நாட்களே ஆன ஒரு ஆண் குழந்தை
குப்பை தொட்டியில் வீசி எறியபட்டது.





இந்த சம்பவத்திலும் குழந்தையின் தாத்தாவுக்கு தொடர்பு
இருக்குமோ என்ற ஐயம் போலிசுக்கு எழுந்துள்ளது.





தாயின் கவன குறைவால் நடந்த துயர் சம்பவம் இது.



மொபைல் பேசும் அவசரத்தில் தந்தை  குழந்தையை காருக்குள்
வைத்து பூட்டி விட்டு சென்றதால் குழந்தை மூச்சு திணறி 
இறந்து விட்டது.

இப்போது சொல்லுங்கள். குழந்தைகளை அவர்களின் 
பெற்றோர்களிடம் இருந்து காப்பது எப்படி. 






THE NEWAGE YOUNG GENERATION - tamil

புது யுகத்தின் இளைய தலைமுறை

இன்றைய இளம் மாணவ சமுதாயத்தை நினைத்தால்
நெஞ்சம் பதறுகிறது. இளைய தலைமுறையின் தாக்கத்தால்
தலை நிமிர்ந்து நிற்கும் இளம் நாடாக இந்திய நாடு
உருவாகி கொண்டிருக்கும் நேரம் இது.
வயது முதிந்தவர்களால் நிரம்பி வழியும் 'சீன நாடு',
நம்மை கண்டு பயம் கொள்வதற்கு காரணமும் இதுவே ஆகும்.
இளம் மாணவ செல்வங்களின் செயல் பாடுகளை, நடத்தை முறைகளை
சற்று உற்று நோக்கினால் அவர்கள் எதை நோக்கி பயணம்
மேற்கொள்கிறார்கள் என்பதை உணர இயலும்.



சேலத்தில் பள்ளி சீருடையுடன் ஒரு பள்ளி மாணவி ஒரு வாலிபருடன்
அலைந்து திரிந்த போது போலீசாரால் மீட்க பட்டபோது, ரோட்டில்
படுத்து உருண்டு அடம் பிடித்த நிகழ்ச்சியை இந்த செய்தி விவரிக்கிறது.





திருச்சியில் தங்கி கல்லூரியில் படித்து வந்த மாணவி தன்
இள வயது காதலனுடன் ஓடி விட்ட அதிர்ச்சி தகவல் இது.




மது அருந்திய போதையில் கல்லூரி மாணவர் தன்
நண்பரையே பீர் பாட்டிலால் தாக்கி கொன்று விட்டாராம்.





மருத்துவ கல்லூரி மாணவர்கள் கூட இப்போது
நூதனமான முறையில் பரீட்சையில் காப்பி அடிக்க
துவங்கி விட்டனர்.

இளைய தலை முறையின் பெருக்கத்தால் நிரம்பி வழியும்
நம் நாடு மாணவர்களின் ஒழுக்கத்தை பேணி காப்பதில்
கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும்
சமுதாய தலைவர்கள் இதில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும்.
தவறும் பட்சத்தில் மிகுந்த கலாச்சார சீரழிவை பின்னாளில் நாம்
எதிர் கொள்ளும் சூழல் ஏற்பட வழி வகுக்கும்.





TEACHER - STUDENT AFFAIRS AND THE SHOCK - tamil

ஆசிரியர்  -  மாணவர்  உறவும் அதிர்ச்சியும்

ஆசிரியர்  -  மாணவர் உறவு ஒரு காலத்தில் போற்றி வணங்கப்பட்டது.
இந்நாளில் அந்த உறவு பொய்த்து விட்டது. 
தினந்தோறும் வரும் செய்திகள், அதிர்ச்சி  தகவல்களை
தரும் போது எல்லோர் மனமும் அதிர்கிறது. 
ஆசிரியர்களின் ஒழுக்கம் கெட்டு போக காரணம் என்ன.







மேற் குறிப்பிட்ட சம்பவங்கள் அனைத்தும் இரண்டு அல்லது
மூன்று நாட்கள் இடை வெளிக்குள் வெளிவந்த செய்திகள் ஆகும்.
இது போன்ற சம்பவங்கள் தினம் தோறும் நடைபெறுவது
ஒரு சாதாரண விசயமாக தோன்றவில்லை.
தமிழகத்தின் கலாச்சார பண்புகள் எந்த அளவுக்கு சீர் கெட்டு
விட்டது என்பதையே இவை படம் பிடித்து காட்டுகின்றன.
வேலியே பயிரை மேய்வது போல், நல்வழி காட்டும் ஆசிரிய
பெருமக்களே மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்து
சென்றால், இளைய சமுதாயத்தை நல் வழி படுத்துவது எப்படி.

PREVENTION IS BETTER THAN CURE.

Thursday, March 8, 2012

MOTHER AND THE MOTHERHOOD - tamil

தாயும் தாய்மையும்


தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது என்றுரைத்தார்
நபிகள் நாதர்.
மனைவியை கூட 'அம்மா' என்று அழைப்பதில் தவறில்லை,
என்று சொன்னார் காந்தி அடிகள்.
அமெரிக்க பெண்களை 'தாயே' என்று அழைத்து பெண்களின் சிறப்பை
உலகுக்கு உயர்த்தினார் சுவாமி விவேகானந்தர்.
தாய் நாட்டை 'தந்தை நாடு' என்று உலகுக்கு அறிமுகம் செய்தான்'
துருக்கியின் தந்தை -  அடா டர்க்.
ஆனால் நாமோ நம் நாட்டை 'தாய் நாடு' என்று அழைத்து,
பெருமை கொள்கிறோம். பெண்களை மதிக்கும் நாடு நம் நாடு.
"தாயில் சிறந்த கோவில் இல்லை " என்பது தமிழ் பண்பாடு.

சர்வதேச மகளிர் தினத்தை போற்றும் இந்த நாளில் மகளிர் பற்றி 
வந்த சில செய்திகள் மனதை பதற வைக்கிறது.










இதில் அதிர்ச்சி என்னவென்றால் இந்த சம்பவங்கள் அனைத்தும்
மகளிர் பற்றி இன்றைய தினம் வெளிவந்த பத்திரிகை செய்திகள்.

தாயையும், தாய்மையையும் நாம்  இன்றும் போற்றி பாதுகாத்து
வருகிறோம்.தந்தை தவறு செய்தால் கண்டுகொள்ளாமல் விட்டு விடும்
குழந்தைகள், தாயின் சிறு தவறுகளை கூட தவறியும் வெளியில்
சொல்வதில்லை. எந்த மகனுமே தன் தாய் நெறி தவறாதவள், நேர்மையானவள்
மிகவும் தூய்மையானவள்,இறை பக்தி மிக்கவள் என்றே மனதில் எண்ணி
வருகிறான். ஒரு கெட்ட மகன் கூட தன் தாயை உயர்வாகவே எண்ணி
மகிழ்கிறான். தாய் தவறு செய்தாலும் அதை மூடி மறைக்கவே விரும்புகிறான்.
பெரும்பாலான குழந்தைகள், தாயின் குண இயல்பிலேயே தங்களை
வெளிப்படுத்தி கொள்ள விரும்புகின்றன.
தந்தை குடித்தால் அதை ஏற்று கொள்ளும் குழந்தைகள், தாய் குடித்தால்
மிரள்கின்றன.தாய் திருடினால் வெட்கப்படுகின்றன. வேறு நபருடன் சிரித்து
பேசினாலோ அதன்  மனம் பேதலித்து விடுகிறது. தன் தாயை பற்றி
கொண்டிருந்த உயர்வான நம்பிக்கைகள் தகரும் போது, அது ஏற்படுத்தும்
மனவலியை குழந்தைகளால் பொறுக்க இயல்வதில்லை. தன் தாய் கெட்டவள்
என்று உணரும் குழந்தை மற்ற பெண்களையும் இதே கண்ணோட்டத்துடன் காண
துவங்குகிறது. தாயின் மீது கொண்ட நம்பிக்கை தகரும்போது, மற்ற பெண்கள்
அனைவரையும் சந்தேகத்துடன் உற்று நோக்குகிறது. ஆண் குழந்தைகளால் இந்த 
அதிர்சிகளை எளிதில் ஜீரணிக்க இயல்வதில்லை. மனதுக்குள் தேங்கி விடும் இந்த 
வடுக்கள், குழந்தை வளர வளர  குழந்தைகளின் குண இயல்பிலும், நடத்தையிலும் 
பெரும் மாறுதல்களை விளைவித்து விடுகின்றன. பின்னாளில் வளர்ந்த 
இளைனர்களின் மண வாழ்விலும்
 கணவன்-மனைவி உறவிலும் பல விரிசல்கள் ஏற்பட இது வழி 
வகுக்கும். இந்த மனவலிகளில்  இருந்து மீளவே  குழந்தைகள் கூட
"போதை மாத்திரைகளை"
 நாடுகின்றன. வயதுக்கு வரும் முன்பே 'குடிக்கவும்'
துவங்கி விடுகின்றன. போதைக்கு அடிமை ஆகிவிட்டால் திருடவும் கற்று
கொள்கின்றன. குழந்தைகள் கொடிய குற்றவாளிகளாக மாறி விடுவதற்கும்
இதுவே காரணம்.
மேற் சொன்ன செய்திகளில் வரும் பெண்களின் குழந்தைகள், இது போன்ற
பெரும் குற்றங்களை தன் தாய் செய்தாள் என்று அறியும் போது அவர்கள்
மனம் படும் வேதனை, அவர்கள் நடத்தையையும், குண இயல்பையும் - ஏன்
அவர்கள் வாழ்க்கையையே நிர்மூலம் ஆக்கி விடும் என்பதை குற்றம்
செய்யும் தாய்மார்கள் உணர வேண்டும்.