Friday, June 22, 2012

MARRY TO DIVORCE

விவாக - ரத்தாகும் திருமணம்

சென்னையில் விவாக-ரத்தாகும் திருமணங்களின் எண்ணிக்கை
கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது மிகவும்
கவலை அளிக்கும் விஷயம்.
கணவன் மனைவி இருவரும் சம்மதித்து பிரிவதென்று
முடிவு எடுத்து விட்டால் விவாக-ரத்து பெறுவது
மிகவும் எளிது.
விவாக-ரத்து கேட்பவர்களில் பெரும்பாலானவர்கள்
மிகவும் இளம் வயதினர்.
அதிகம் பேர் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
தற்போது 25 சதவீதம் திருமணங்கள்
விவாக-ரத்தில் முடிகின்றன.
கேரளத்துக்கு பின்னர் தமிழ்நாடு
இதில் முன்னிலை வகிக்கிறது.
இதில் படித்தவர்கள் அல்லது படிக்காதோர்
என்ற பாகுபாடு இல்லை.
காதல் திருமணங்கள் தான் என்றில்லை
பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணங்களும்
இப்போது விவாகரத்தை நோக்கியே அடிஎடுத்து
வைக்கின்றன.காரணம் புரியாமல் நீதி அரசர்களும்
சமூக ஆர்வலர்களும் திகைக்கின்றனர்.
இதனால் குடும்பங்கள் பாதிப்பதை விட
தம்பதியினரின் குழந்தைகள் தான் அதிகம்
பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இந்த பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள்
தன்னம்பிக்கை இழந்தவர்களாகவும் மனச்சோர்வால்
ஒரு வித பயத்துடனும் மன உளைச்சலுடனும்
பாதுகாப்பற்ற சூழலில் வாழும் நிலைக்கு
தள்ளப்படுவதால் அவர்களின் வாழ்க்கை தரமும்
சிதைந்து சீர் கெட்டு விடும்.
மாறி வரும் நவீன புதுமை உலகில்
திருமணம் ஒரு கேள்விக்குறி ஆகிவிட்டது.
திருமணம் ஆகாமலே சேர்ந்து வாழும் உரிமை
இதை இன்னும் எளிதாக்கி விட்டது.
 திருமணம் ஒரு புனித பந்தம் ,அது கருத்து ஒருமித்து வாழ 
வகை செய்யும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் என்ற கருத்து 
தம்பதியர் இடையே ஏற்படுமானால் விவாக-ரத்து 
தவிர்க்க படலாம்.விரிசல் சீர் படலாம்.
அழகுக்காக செய்யும் திருமணம் 
அழகு குறைந்தால் மாறி விடும்.
பணத்துக்காக செய்யும் திருமணம் 
பணம் போனால் பறி போய் விடும்.
பதவிக்காக செய்யும் திருமணம் 
பதவி போனால் பறந்து விடும் 
புகழுக்காக செய்யும் திருமணம் 
புகழ் குறைந்தால் மறைந்து விடும் 

"கல்யாணம்,கச்சேரி,கொண்டாட்டம்  எல்லாமும் வேடிக்கை நமக்கு 
அதில் வேறென்ன இருக்கு - டேக் இட் ஈஸி"
நடிகர் கமலஹாசன் ஒரு படத்தில் பாடி நடிப்பார்.
இந்த கருத்து உள்ளவர்கள் திருமணம் புரிந்து 
கொள்ளாமல் இருப்பது இன்றைய கால கட்டத்தில் 
மிகவும் நன்மை பயக்கும்.


BELIEVE THAT YOU CAN'T DIVORCE YOUR PARENTS OR CHILDREN
IT IS BETTER TO DIVORCE  BEFORE MARRIAGE THAN AFTER MARRIAGE.
IT IS FAR BETTER TO DIVORCE
BEFORE BEARING CHILDREN THAN
AFTER CHILDREN ARE BORN.
LOVE IS POSSIBLE WITHOUT PARENT'S CONSCENT
SEX IS POSSIBLE WITHOUT PARENT'S CONSCENT
MARRIAGE IS NOT POSSIBLE WITHOUT PARENT'S CONSCENT.
AFTER ALL, YOU ARE NOTHING BUT
THE BLOOD, BONE AND FLESH OF YOUR PARENTS.
LIVING-IN-ARRANGEMENT MAY GIVE
SHORT-TERM RELIEF, BUT
LONG-TERM GRIEF.
IF THE INTENSION  OF THE MARRIAGE IS TO DIVORCE
EVEN GOD CAN'T PREVENT IT.



No comments:

Post a Comment