Wednesday, March 21, 2012

THE ART OF TEACHING LOVE - tamil

மன்மத கலைக்கல்வி


'மன்மத லீலையை வென்றார் உண்டோ'
ஒரு காலத்தில் பாகவதர் ஆண்களை குறிவைத்து பாடிய பாடல்
ஆண்களை கூட சற்று முகம் சுளிக்க வைத்தது.
"மன்மத லீலை" என்ற படத்தை, பாலச்சந்தர் எடுத்த போது கூட
நம் சமூகம் அவரை சாடியது. என்றாலும், தற்போது  கூடங்குளம் அணு உலை
செய்திகளை காட்டிலும் நம் மீடியாக்களை அதிகம் ஆக்ரமித்த செய்தி
நமது பெருமைக்குரிய ஆசிரிய சமூகத்தை சேர்ந்த ஒரு மூத்த ஆசிரியை 
குமுது அம்மையார் அவர்களை பற்றி வந்த செய்தியாகும்.
வயதுக்கு வராத ஒரு இள மாணவனும் இதில் சம்பந்த பட்டிருப்பதால் 
இந்த விஷயம் சற்று முக்கியத்துவம் பெறுகிறது.


37 வயது ஆசிரியை 17 வயது மாணவரை கடத்தி, காதல் வயப்பட்டு
உல்லாச கடலில் மூழ்கியது எப்படி. ஆசிரியை போலீசாரிடம் கொடுத்த
பரபரப்பு வாக்குமூலம், போலீசாரை மட்டுமல்ல, பொதுமக்களையும்,
ஆசிரிய பெருமக்களையும், தாய்மார்களையும், குறிப்பாக இள வயது
மாணவர்களையும் நிலைகுலைய செய்து விட்டது.

இந்தி ஆசிரியை அவர். திருமணமானவர்.ஒரு குழந்தைக்கு தாய். கணவனை பிரிந்து வாழ்பவர். இந்த குறிப்பிட்ட மாணவனை அவருக்கு மிகவும் பிடிக்கும். கட்டிபிடி காதலில் தொடங்கி, அந்தரங்கமாகி, கட்டில் கடந்து 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற நிர்வாண நிலைக்கு தங்களை உயர்த்தி கொண்டவர்கள்  இந்த காதலர்கள்.மாணவன் படிப்பதோ பிளஸ்-1 வகுப்பு. வயதோ 17 . ஆசிரியை சொல்கிறார்- "என் காதலனை பார்க்கும்போது,என்னை ஒரு 16  வயது மாணவியை போல் மனதில் எண்ணி கொள்வேன்,செக்ஸ் ரீதியாக இணையும் நிலையில் நான் பரவசம் எய்தியதுண்டு" சற்று குரூரமாக தோன்றினாலும் அவரது வாக்குமூலம் சமூக ஆர்வலர்களை எல்லாம் சிந்திக்க தூண்டாமல், செயல் இழக்கும் நிலைக்கு தள்ளி விட்டது. அவர் மேலும் தரும் தகவல் தமிழ் சமூகத்தை தலை கீழாக புரட்டி போட்டு விட்டது. அவர் சொல்கிறார்.
"எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை. எங்கள் காதலை வாழ விடுங்கள். இனி என் கணவர் எனக்கு தேவை இல்லை. என் இளம் காதலன் தான் எனக்கு வேண்டும்.வாழ்ந்தால் இனி அவனோடு தான் வாழ்வேன், இல்லையேல் செத்து மடிவேன்."
இளம் மாணவன் சொல்வதை இப்போது சற்று கேளுங்கள். "ஆசிரியை தான் என் உயிர் காதலி, அவரை திருமணம் செய்து வாழ என்னை அனுமதியுங்கள்.சட்டத்தை பற்றி எனக்கு கவலை இல்லை.இந்த உலகை பற்றி, பெற்றோர்,உற்றார்,உறவினர் பற்றி எனக்கு கவலை இல்லை. வாழ விடுங்கள், இல்லையேல் சாக விடுங்கள் அல்லது சாவிலாவது இனைய விடுங்கள்"


                                   
இந்த காதலனை அடைய கணவனை நிரந்தரமாக பிரிய தயாராக
இருப்பதாகவும், தன் ஒரே மகனையும் தன் தந்தையுடன் அனுப்பி விட
இருப்பதாகவும் இந்த வயது முதிர்ந்த காதலி சொல்கிறார்.


பொருந்தா காதல் உறவுக்குள் சிக்கிய இந்த புதுமை காதலர்களை
எப்படி மீட்பது என்பது தான் இருவர் குடும்பமும் கொண்டுள்ள கவலை.
ஆனால் ஜெயலில் இருக்கும் ஆசிரியை, எதையும் கண்டு கொள்ளாமல்
மிகவும் சந்தோசத்துடன் இருப்பதாகவே சிறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

மதவாதிகளை கேட்டால் 'கலிகாலம்' என்பர். அல்லது உலகம்
அழிவதற்கான காலம் நெருங்கி விட்டதின் அறிகுறி என்பர்.
மன நல வல்லுனரை கேட்டால் இது ஒரு சாதாரண
'SEXUAL PERVERSION'
உடல்,மன ரீதியான செக்ஸ் கிளர்ச்சி அல்லது எழுச்சி என்பர்.
மருத்துவரை கேட்டால்
SOME CHANGES IN THE BLOOD CHEMISTRY OR HORMONES
மூளையின் செக்ஸ் சென்டரில் ஏற்பட்ட மாறுதல் என்பர்.
செக்ஸ்சாலஜிஸ்ட்-ம் கேட்டால் கணவரோடு உறவு சரியாக இல்லாததால்
ஏற்பட்ட கோளாறு இது. மனைவியை திருப்தி செய்ய இயலாத கணவராக,
அவர் இருந்தால், இது போல் நிகழ வாய்ப்பு அதிகம். எனவே
இதில் பெரிய தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை என்று
மிகவும் எளிதாக சொல்லி விடுவார்.

ஆண் குழந்தைகள் சாதாரணமாகவே 'தாயன்புக்காக' ஏங்குவதுண்டு.
சில நேரங்களில் வெறுப்பை, குழந்தைகளின் மேல் திணிக்கும் சில
தாய்மார்களும் உண்டு. தாயின் அன்புக்காக ஏங்கி தவிக்கும் ஆண்
குழந்தைகள், தங்கள் மேல் பாசம் சொரியும் 'தாய் போன்ற' ,தாய் வயதை
ஒத்த ஆசிரியைகளிடம் தங்கள் மனக்குறையை வெளி இடுவது
உண்டு.இந்த நெருக்கம் சில வேளைகளில் காதலாக கனியவும் 
வாய்ப்பு உண்டு. அழகிய ஆசிரியைகள் இந்த சந்தர்பங்களை 
தவறாக பயன்படுத்தி, தங்கள் இச்சைகளை தீர்த்து கொள்வதற்கு 
இளம் மாணவர்களை தூண்டுவதும் உண்டு.

கலீல் ஜிப்ரான் ஒருமுறை சொன்னார்.
"பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றுங்கள்"
வயதான ஆசிரியைகளிடம் இருந்து இளம் மாணவர்களை 
காப்பாற்றுவது எப்படி. 




No comments:

Post a Comment