பெற்றோர்களும் அவர்கள் இளைக்கும் கொடுமைகளும்
பெற்றோர்களால் குழந்தைகளுக்கு பாதுகாப்பா அல்லது
பாதுகாப்பின்மையா.
பெற்றோர்கள் ஏன் தங்கள் குழந்தைகளிடம் இவ்வளவு
கடுமையாக அல்லது கொடுமையாக நடந்து கொள்கிறார்கள்.
பிடிக்காத கட்டாய திருமணத்தை குழந்தைகளின் மீது
பெற்றோர்கள் திணிப்பது ஏன்.
_________________________________________________________________
பெற்ற குழந்தையை விற்ற தாய்
நானே பெற்றேன் - நானே கொன்றேன்.
பெறுவதற்கு உரிமை இருப்பது போலவே
அதை அழிப்பதற்கும் உரிமை உண்டு.
அந்த நாளில் பராசக்தியில் கலைஞர் எழுதிய வசனம் இது.
கொல்வதை விட விற்பது மேல் என்று
பெற்ற தாய் எண்ணி இருக்கலாம்.
பெண் குழந்தைகளை விலை பேசும் தாய்மார்கள்
மிகவும் கொடுமையானவர்கள்.
குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது என்பது
ஒரு தொழிலை வளர்த்து விரிவுபடுத்துவதற்கு சமம்.
அதற்கு வலுவில்லாதவர்கள் தகுதி பெரும் வரை
குழந்தை பெறுவதை சற்று ஒத்தி போடுவது நன்மை பயக்கும்.
___________________________________________________________________
பெற்ற மகளை கொன்ற தந்தை
குடி போதையில் மகளை அடித்து கொன்று விட்டு
குற்ற உணர்வு தாங்காமல் தூக்கு போட்டு
தற்கொலை செய்து கொண்டார் தந்தை.
குடி - குடியை அல்லது குலத்தை கெடுக்கும் என்பர்.
இப்போது குடிப்பவர்கள் போதையில் தங்கள் குழந்தைகளை கூட
கொன்று விடுகின்றனர். டாஸ்மாக் கடைகளில், காலை நேரங்களில் கூட
அலை மோதும் கூட்டத்தை பார்த்தால் மனது பதைக்கிறது.
குடித்து விட்டு கார் ஓட்டினால் அபராதம் உண்டு.
குழந்தைகளை,மனைவியரை அடித்து உதைப்பவர்களுக்கு
என்ன தண்டனை. மது வியாபாரம் செய்யும் அரசு தான்
முடிவு செய்ய வேண்டும்.
___________________________________________________________________
குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தந்தை
மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் இரண்டு
குழந்தைகளை கொன்று விட்டு தந்தை தற்கொலை.
_______________________________________________________________
கலீல் ஜிப்ரான் சொன்னார்.
"குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து
முதலில் காப்பாற்ற வேண்டும்"
ஒரு நூறு வருடங்களுக்கு முன் அவர் உதிர்த்த
வார்த்தைகளில் தான் எத்துனை உண்மை.
குடிகாரனை மணக்க சொல்லி பெற்றோர் வற்புறித்தினர்
என்று தன்னை பெற்ற பெற்றோர் மீது மகள்
புகார் தருவது மனதை நெருடுகிறது.
No comments:
Post a Comment