புது யுகத்தின் இளைய தலைமுறை
இன்றைய இளம் மாணவ சமுதாயத்தை நினைத்தால்
நெஞ்சம் பதறுகிறது. இளைய தலைமுறையின் தாக்கத்தால்
தலை நிமிர்ந்து நிற்கும் இளம் நாடாக இந்திய நாடு
உருவாகி கொண்டிருக்கும் நேரம் இது.
வயது முதிந்தவர்களால் நிரம்பி வழியும் 'சீன நாடு',
நம்மை கண்டு பயம் கொள்வதற்கு காரணமும் இதுவே ஆகும்.
இளம் மாணவ செல்வங்களின் செயல் பாடுகளை, நடத்தை முறைகளை
சற்று உற்று நோக்கினால் அவர்கள் எதை நோக்கி பயணம்
மேற்கொள்கிறார்கள் என்பதை உணர இயலும்.
சேலத்தில் பள்ளி சீருடையுடன் ஒரு பள்ளி மாணவி ஒரு வாலிபருடன்
அலைந்து திரிந்த போது போலீசாரால் மீட்க பட்டபோது, ரோட்டில்
படுத்து உருண்டு அடம் பிடித்த நிகழ்ச்சியை இந்த செய்தி விவரிக்கிறது.
திருச்சியில் தங்கி கல்லூரியில் படித்து வந்த மாணவி தன்
இள வயது காதலனுடன் ஓடி விட்ட அதிர்ச்சி தகவல் இது.
மது அருந்திய போதையில் கல்லூரி மாணவர் தன்
நண்பரையே பீர் பாட்டிலால் தாக்கி கொன்று விட்டாராம்.
மருத்துவ கல்லூரி மாணவர்கள் கூட இப்போது
நூதனமான முறையில் பரீட்சையில் காப்பி அடிக்க
துவங்கி விட்டனர்.
இளைய தலை முறையின் பெருக்கத்தால் நிரம்பி வழியும்
நம் நாடு மாணவர்களின் ஒழுக்கத்தை பேணி காப்பதில்
கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும்
சமுதாய தலைவர்கள் இதில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும்.
தவறும் பட்சத்தில் மிகுந்த கலாச்சார சீரழிவை பின்னாளில் நாம்
எதிர் கொள்ளும் சூழல் ஏற்பட வழி வகுக்கும்.
No comments:
Post a Comment