நாடும் நம் தலைவர்களும்
தலைவன் எவ்வழி - மக்கள் அவ்வழி
என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பிரட்சினைகளை
எப்படி அலசி ஆராய்கிறார்கள் என்று சற்று உற்று பாருங்கள்
தப்பு செய்யும் குழந்தைகளை, மாணவர்களை தண்டிக்கலாம்.
நம் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களை தண்டிப்பது இருக்கட்டும்,
இவர்களை திருத்துவது எப்படி.
மக்கள் தான் முடிவு சொல்ல வேண்டும்.
__________________________________________________________________
படித்த பெண்களும் பண்பாடும்
பெண்கள் படித்தால் சமூகம் உயரும் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால் நிலை என்ன
ஆடம்பர வாழ்கைக்கு ஆசைப்பட்டு
நல்ல குடும்பத்தை சேர்ந்த படித்த பெண்கள்
விபசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
நம் நாட்டின் உச்ச நீதிமன்றம் தரும் அதிர்ச்சி தகவல் இது.
____________________________________________________________________
படித்த பெண்களும் திருமணமும்
கணவரின் குறைவான படிப்பால் அதிர்ச்சி அடைந்த
பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கணவர் பத்தாவது வரை படித்தவர் என்ற மன வருத்தம்
மற்றும் தன் அழகுக்கு ஏற்றவராக கணவர் இல்லை என்ற
மனக்குறை தற்கொலைக்கு காரணம் என்று சொல்ல படுகிறது.
பெற்றோர்களின் தவறான முடிவுகளும், அவசரம் கலந்த
திடீர் செயல் பாடுகளும் இது போன்ற திடீர் சாவுகளுக்கு
காரணமாக அமைகின்றன.
____________________________________________________________________
செல் போன் காதலும் திருமணமும்
கண்டவுடன் காதல் கேள்வி பட்டு இருக்கிறோம்.
நவீன உலகில் செல் போன் காதல் மட்டுமல்ல
திருமணமும் அரங்கேறி விடும் நிலை அதிகரித்து விட்டது.
புறா விடு தூது போய்
மிஸ்டு கால் விடு தூது
என்றாகிவிட்டது புதிய காலம்.
No comments:
Post a Comment