Sunday, March 4, 2012

LOVE AND THE DEATH - tamil

காதலும் சாதலும்

காதல் காதல் காதல்
அது போயின்
சாதல் சாதல் சாதல்.
இதை எந்த கவிஞன் சொல்லி சென்றானோ தெரியவில்லை

காதல் என்பது எதுவரை, கல்யாண காலம் வரும் வரை.
கல்யாணம் என்பது எதுவரை?
இது தான் இப்போது கேள்விக்குறியாகி  விட்டது.
கூடவே கேலிக்குரியதாகவும் ஆகி விட்டது.


கள்ளக்காதல் விவகாரம் இன்றைய தமிழ் சமூகத்தை
ஆட்டி படைக்கும் பெரும் நோய் ஆகிவிட்டது.


மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால்   மனைவியை கொன்று
தற்கொலை செய்து கொண்ட ஒரு கணவனின் கடிதம், மனைவியின்
அந்தரங்க காதலர்கள் பற்றி விலாவாரியாக விவரிக்கிறது.


கலாசார சீரழிவில் சிக்கினாள் -  துரோகம் செய்தாள்
காதல் மனைவி பற்றி புலம்பும் ஒரு கணவன்.
பெரும்பாலான நோய்களுக்கு தடுப்பு மருந்துகள் உள்ளன.
கள்ளக்காதல் நோய்க்கு தடுப்பு சிகிச்சை என்ன.


போலியோ நோயை இந்தியாவில் முழுமையாக ஒழித்து விட்டோம்.
உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் நமக்கு
சான்று வழங்கியிருக்கிறது.
கள்ளக்காதல் நோயை ஒழிப்பது எப்படி.


திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் காதலியின்
தாயை வெட்டி கொன்று விட்ட காதலன்.
பெண்ணின் காதலை ஏற்க மறுத்தால் பெற்ற தாய்க்கு
இது தான் தண்டனையா.
இந்த இளைஞ்சர்களை நல்வழி படுத்துவது எப்படி.


இந்த தகவல் சற்று வித்தியாசமானது.
தாய் மகனை கண்டிப்பது நியாயம்.
இங்கு மகன் தாயின் தீய செயலை கண்டு
ஆவேசம் அடைந்துள்ளார். இது தாயின் கள்ளக்காதலனுடன்
சேர்த்து தாயையும் கொலை செய்யும் அளவுக்கு 
மகனை தூண்டியிருக்கிறது. சில நேரங்களில் 
குழந்தைகள் கூட தர்மத்தை நிலை நாட்டுகிறார்கள்.


காதலிக்க மறுத்த காதலியை வெட்டி கொன்ற பின்
காதலரும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த இளைஞ்சர்களை இந்த காதல் நோயிலிருந்து
காப்பாற்றுவது எப்படி. மேலை நாட்டையும் மிஞ்சும் வண்ணம்
நம் இளைனர்களின் மனோபாவம் பலவீனம் அடைந்து விட்டது.


காதல் கொள்வதை விட காதலித்து கொல்வது
இப்போது நம் நாட்டில் வாடிக்கை ஆகிவிட்டது.
தமிழ் நாட்டில் சாலை விபத்தில் இறப்போர் எண்ணிக்கை
15000 - ஐ தாண்டி விட்டது.
காதல் விபத்தில் இறப்போர் எண்ணிக்கை இதை விட
அதிகரிக்கும் அபாயம் இனி ஏற்படும் போல் தெரிகிறது.









 

No comments:

Post a Comment