Friday, June 22, 2012

MARRY TO DIVORCE

விவாக - ரத்தாகும் திருமணம்

சென்னையில் விவாக-ரத்தாகும் திருமணங்களின் எண்ணிக்கை
கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது மிகவும்
கவலை அளிக்கும் விஷயம்.
கணவன் மனைவி இருவரும் சம்மதித்து பிரிவதென்று
முடிவு எடுத்து விட்டால் விவாக-ரத்து பெறுவது
மிகவும் எளிது.
விவாக-ரத்து கேட்பவர்களில் பெரும்பாலானவர்கள்
மிகவும் இளம் வயதினர்.
அதிகம் பேர் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
தற்போது 25 சதவீதம் திருமணங்கள்
விவாக-ரத்தில் முடிகின்றன.
கேரளத்துக்கு பின்னர் தமிழ்நாடு
இதில் முன்னிலை வகிக்கிறது.
இதில் படித்தவர்கள் அல்லது படிக்காதோர்
என்ற பாகுபாடு இல்லை.
காதல் திருமணங்கள் தான் என்றில்லை
பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணங்களும்
இப்போது விவாகரத்தை நோக்கியே அடிஎடுத்து
வைக்கின்றன.காரணம் புரியாமல் நீதி அரசர்களும்
சமூக ஆர்வலர்களும் திகைக்கின்றனர்.
இதனால் குடும்பங்கள் பாதிப்பதை விட
தம்பதியினரின் குழந்தைகள் தான் அதிகம்
பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இந்த பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள்
தன்னம்பிக்கை இழந்தவர்களாகவும் மனச்சோர்வால்
ஒரு வித பயத்துடனும் மன உளைச்சலுடனும்
பாதுகாப்பற்ற சூழலில் வாழும் நிலைக்கு
தள்ளப்படுவதால் அவர்களின் வாழ்க்கை தரமும்
சிதைந்து சீர் கெட்டு விடும்.
மாறி வரும் நவீன புதுமை உலகில்
திருமணம் ஒரு கேள்விக்குறி ஆகிவிட்டது.
திருமணம் ஆகாமலே சேர்ந்து வாழும் உரிமை
இதை இன்னும் எளிதாக்கி விட்டது.
 திருமணம் ஒரு புனித பந்தம் ,அது கருத்து ஒருமித்து வாழ 
வகை செய்யும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் என்ற கருத்து 
தம்பதியர் இடையே ஏற்படுமானால் விவாக-ரத்து 
தவிர்க்க படலாம்.விரிசல் சீர் படலாம்.
அழகுக்காக செய்யும் திருமணம் 
அழகு குறைந்தால் மாறி விடும்.
பணத்துக்காக செய்யும் திருமணம் 
பணம் போனால் பறி போய் விடும்.
பதவிக்காக செய்யும் திருமணம் 
பதவி போனால் பறந்து விடும் 
புகழுக்காக செய்யும் திருமணம் 
புகழ் குறைந்தால் மறைந்து விடும் 

"கல்யாணம்,கச்சேரி,கொண்டாட்டம்  எல்லாமும் வேடிக்கை நமக்கு 
அதில் வேறென்ன இருக்கு - டேக் இட் ஈஸி"
நடிகர் கமலஹாசன் ஒரு படத்தில் பாடி நடிப்பார்.
இந்த கருத்து உள்ளவர்கள் திருமணம் புரிந்து 
கொள்ளாமல் இருப்பது இன்றைய கால கட்டத்தில் 
மிகவும் நன்மை பயக்கும்.


BELIEVE THAT YOU CAN'T DIVORCE YOUR PARENTS OR CHILDREN
IT IS BETTER TO DIVORCE  BEFORE MARRIAGE THAN AFTER MARRIAGE.
IT IS FAR BETTER TO DIVORCE
BEFORE BEARING CHILDREN THAN
AFTER CHILDREN ARE BORN.
LOVE IS POSSIBLE WITHOUT PARENT'S CONSCENT
SEX IS POSSIBLE WITHOUT PARENT'S CONSCENT
MARRIAGE IS NOT POSSIBLE WITHOUT PARENT'S CONSCENT.
AFTER ALL, YOU ARE NOTHING BUT
THE BLOOD, BONE AND FLESH OF YOUR PARENTS.
LIVING-IN-ARRANGEMENT MAY GIVE
SHORT-TERM RELIEF, BUT
LONG-TERM GRIEF.
IF THE INTENSION  OF THE MARRIAGE IS TO DIVORCE
EVEN GOD CAN'T PREVENT IT.



Tuesday, June 19, 2012

ABDUL KALAM - A SAINT OR A SCIENTIST

அப்துல் கலாம்

விஞ்ஞானி ஆன ஒரு ஞானி


அப்துல் கலாம் -  இந்த மனிதரை பற்றிய எனது கருத்துக்களை அல்லது எண்ணங்களை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பல முறை நான் விரும்பியதுண்டு.சில நண்பர்களுக்கு என் கருத்துக்களில் உடன்பாடு இல்லை என்பது எனக்கு தெரியும்.இந்த மாமனிதர் என்னை கவர்ந்து விட்டவர் என்ற காரணம் ஒன்றே இவரை பற்றி நான் எழுதுவதற்கு காரணமாக அமைந்தது என்று சொன்னால் அது மிகை அல்ல.

ஒரு மனிதனை பற்றி எழுதுவது என்றால் அவனால் இந்த மனித சமுதாயம் பயன் பெற்று இருக்க வேண்டும், அல்லது தான் வாழும் காலத்தில் மக்களுக்கு நல்ல பயனுள்ள கருத்துக்களை - மக்களின் வாழ்க்கை தரும் உயர்வு பெரும் நல்ல செயல்களை அவன் செய்திருக்க வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினரின் நாயகனாக, ஒரு 'ரோல் மாடலாக' இந்த முதிய இளைனர் விளங்குகிறார் என்பதே அவர் செய்து வரும் நற் செயல்களுக்கு ஒரு நற் சான்று.

ஒரு எளிய முஸ்லிம் தமிழ் குடும்பத்தில் பிறந்து ஒரு நாடறிந்த விஞ்ஞானியாக தன்னை உயர்த்திக்கொண்ட வரலாறு பற்றி நான் இங்கு விவரிக்க போவதில்லை. தன்னிகரற்ற அறிவியல் சாதனைகளால் 'பாரத ரத்னா' என்ற உயர் தேசிய விருதினை பெற்றது கூட கலாமை பொறுத்த வரையில் ஒரு பெரும் சாதனையில்லை. விண் விளி சாதனைகள் நிகழ்த்தி
"அக்னி நாயகனாக" அவர் உலா வந்தது கூட அவரை பொறுத்த வரை ஒரு சாதாரண நிகழ்ச்சியே ஆகும்.

அசாதாரமான  சாதனைகளை உலகின் முன் நிகழ்த்தி காட்டிய இந்த அசாதாரமான மனிதன்  தன்னை எப்போதுமே ஒரு  சாதரணமான  மனிதனாகவே  காட்டி கொண்ட  விதம்  என்னை  பல முறை வியக்க வைத்ததுண்டு. சிறிய  வெற்றிகளுக்கு  எல்லாம்  விழா  எடுத்து  மகிழும்  இக்கால  சூழலில்  அபாரமான  அறிவியல்  சாதனைகளை  நிகழ்த்தி  காட்டிய  இந்த  "வெற்றியின் சிகரம்" எப்போதுமே  தன்னை  வெளி உலகுக்கு  அறிமுகம்  செய்து  கொள்ள  ஒரு போதும்  விரும்பியதில்லை.

பதவிகளை  தேடி  அலையும்  இவ்வுலகில்  இந்தியாவின்  உயர் பதவி  இவரை  வலிய  தேடி வந்து  அணைக்க  இருந்த போது, அதன்   செயலை எண்ணி  கலாம்  மிகவும்  நாணம்  அடைந்தார். அன்றைய  பாரத  பிரதமர்  அவர்களே  இவரை  தேடி  வந்து  "ஜனாதிபதி  பதவி" யை  ஏற்று கொள்ளும்படி  வற்புறுத்திய  போது  இவர்  அதை  ஏற்க  மிகவும்  தயங்கினார்.  அழகிய  பெண்களை  கூட ஏறெடுத்து  பார்க்க  தயங்கும்  கலாம்  அவர்களை  'பதவி  தேவதை' தன்  பொன் கரங்களால்  ஆரத்தழுவி  தன்னுடமையாக்கிக் கொண்டாள். ஜனாதிபதி  பதவி  இவரால்  தரம் உயர்ந்தது. பதவி  சுகத்தை  நாடாத  கலாமை கண்டு  பதவி  தேவதை  மட்டுமல்ல - இந்த  நாடே வியந்தது. அரண்மனையின்  நீண்ட  கதவுகள்  சாதாரண  மக்களுக்காக  திறந்து  விடப்பட்டன. ஜனாதிபதி  மாளிகை  சாதாரண  மனிதர்களும்  உலா  வரும்  எழிலகம்  ஆக  உரு மாறிற்று. மக்கள் நாயகனே  மக்களில்  ஒருவனாக  காட்சி  அளித்தது  கண்டு  நாடே வியந்தது. யார் வேண்டுமானாலும், எப்போது  வேண்டுமானாலும்  ஜனாதிபதியை  சந்திக்க  முடியும்  என்ற  கலாமின்  அறிவிப்பு  அற்ப பதவிகளில்  இருப்போரையும்  அதிர வைத்தது. பதவி  சுக வாசிகள்  இந்த அறிவிப்பினால்  மிரண்டு போனார்கள். "மக்கள் எவ்வழி, மன்னன்  அவ்வழி" என்ற பொன் மொழிக்கு  இணங்க, ஜனாதிபதியே  மக்களை  நோக்கி  நடந்த காட்சி  இந்திய  வரலாற்றில்  முதல்  முதலாக  அரங்கேறியது. நேற்று பெய்த மழையில்  இன்று  வளர்ந்த  காளான்  தலைவர்கள்  எல்லாம்  கலாமை  பார்த்து  பயந்தார்கள். எங்கே, மக்களும்  தங்களை  கலாம்  போல்  இருக்க  சொல்வார்களோ - ஒரு வேளை  அப்படி  சொன்னால் என்ன  செய்வது  என்று  மூளையை  பிசைந்தார்கள். அப்துல் கலாம் - இந்திய  திரு நாட்டிற்கு  கிடைத்த  ஓர்  அற்புத தலைவர்.

கலாம் மிகவும் எளிமையாக இருப்பதற்கு காரணம் என்ன? அவர் "ஜனாதிபதி" போல் வேஷம் கூட போடவில்லை. சாதாரண  கலாமாகவே  தன்னை  எண்ணிக்கொண்டார். ஏன் - ஒரு விஞ்ஞானி  என்று கூட தன்னை பெருமைப்பட அவர்  கூறி கொண்டதில்லை. பதவிகளின்  பெயரால் என்றுமே அவர் தன்னை அடையாளம் காண  முயன்றதில்லை.அவரின்  எளிமை கோலத்தை கூட கிண்டல் செய்து  மகிழ்ந்தவர்கள் பலர். அவரின் நடை உடை பாவனைகளை கேலி சித்திரமாக்கி பிரசுரித்து மகிழ்ந்தவர் சிலர். தன்னை அறிந்து கொண்டவர்கள் பிறரின் விமர்சனம் கண்டு மனம் கலங்குவதில்லை. கலாம் 21-ம் நூற்றாண்டின் "சாக்ரடீஸ்" ஆக வலம் வந்தார். இளைனர்களை தட்டி எழுப்பினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் இளைஞர்கள்,மாணவர்கள் அதிக அளவில் குவிந்தனர். அவரின் கருத்துரைகளை ஆவல் பெருக கேட்டு மகிழ்ந்தனர். கோடிக்கணக்கான இளைனர்களின் மாடல் தலைவனாக அவர் உயர்ந்தார். இளைனர்களுக்கு சிந்திக்கவும் ஆக்க பூர்வமான கனவுகளை வளர்த்து அதை செயல் படுத்தும் கலைகளையும் கற்றுக் கொடுத்தார். முன்னாள்  ஜனாதிபதி என்ற போலி அந்தஸ்துக்குள் தன்னை அடைத்துக் கொள்ள விரும்பாமல் கலாமாகவே மக்கள் மத்தியில் வலம் வந்தார். நம் நாட்டு கல்லூரி,பல்கலைகழகம் என்றில்லாமல் வெளி நாட்டு கல்லூரிகளும்,பல்கலைகழகங்களும் இவரை போட்டி போட்டு அழைத்து கெளரவித்தன. இவர் வாங்கி குவித்த "டாக்டர்" பட்டங்களுக்கு அளவே இல்லை. கலாம் என்றால் கர்வம் இல்லாதவர் என்பது மக்களின் ஒரு மித்த கருத்தாகும்.

முஸ்லிம்கள் மத்தியில் கலாம் பற்றி பல்வேறு கருத்து பேதங்கள் உண்டு. அது பற்றி விளக்க முற்படுவது என் நோக்கமல்ல. பி.ஜெ.பி.தேர்வு செய்வதால் மட்டுமே இவர் முஸ்லிம்களுக்கு எதிரி ஆகி விட முடியாது. இது சுயநலம் கொண்ட சில முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கடைந்தெடுத்த பெரும் பொய் கூற்றாகும். இந்திய அரசியலில் கலாம் போன்ற நேர்மையான முஸ்லிம்கள் பெரிய பதவிகளை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த "சந்துமுனை சிந்துபாடிகள்" முஸ்லிம் அமைப்புகள் என்ற பெயரில் இல்லாத-பொல்லாத அவதூறுகளையெல்லாம்  முனைந்து நின்று பரப்ப துணிவது கண்டிக்கத் தக்கது. கலாம் இந்த அவதூறுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஓர் உயர்ந்த மனிதர்; மனிதப் புனிதர்.இளகிய மனமும்,ஏழைக்கு இறங்கும் மனப்பாங்கும் கொண்ட ஓர் ஏழை பங்காளர். தன் பெயருக்கு தகுந்தாற்போல் 'திருமறையை' நன்கு கற்றுணர்ந்து அதை வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஒரு சிறந்த முஸ்லிம் அவர். விஞ்ஞானியாக இருந்தும் ஞானி போல் வாழ்பவர்.

இந்திய திருநாடு இன்று ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நேர்மையான நல்ல தலைவர்கள் இன்று நம்மிடையே இல்லை. இருக்கும் ஒரு சில தலைவர்களும் நேர்மையானவர்கள் என்று சான்று பகரும் நிலையில் இல்லை. சினிமாக் காரர்களின் கைகளில் அரசியலும் நாடும் சிக்கி சீரழிந்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரையில் அரசியல் தலைவர்கள் எல்லாம் சினிமா நடிகர்களாக அல்லது திரை  கதை-வசன கர்த்தாக்களாக இருப்பவர்களே உள்ளனர். அரசியல் தலைவர்கள்  எல்லோரும் நம் தமிழ் நாட்டில் சினிமா உலகில் இருந்தே வருகிறார்கள். பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் சினிமா கலைனர்களே. தமிழ் நாட்டை சேர்ந்த  கலாம் ஒரு சினிமா கலைனர் அல்ல. நேர்மையான  முதிர்ந்த  'நேஷனல்  லீடர்'. அவரே மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பு வகிக்க வேண்டும்  என்று பொறுப்புள்ள  அரசியல் கட்சி பிரமுகர்கள்  அனைவரும் வேண்டுகோள் விடுத்தும், பதவி வலிய வந்து  மீண்டும் வீட்டு  கதவை பலமுறை  தட்டியும், ஆசைக்கு பணியாமல் சொந்த மன சாட்சிக்கு பயந்து, பதவியை தூக்கி எறிந்த கலாம் என் கண் முன் உயர்ந்து நிற்கிறார். 
சங்கு சுட்டாலும் வெண்மை தரும் 


Monday, June 18, 2012

MARRIAGES ARE MADE IN HEAVEN

திருமணங்கள் சொர்க்கத்தில்

நிச்சயக்கப்படுகின்றன

இந்த பொன்மொழி உண்மையா அல்லவா என்பது
நம் விவாதமல்ல; ஆனால் இது பொன் மொழியும் அல்ல
பழமொழியும் அல்ல என்பதே நம் கருத்து.
இப்போது திருமணங்கள் இன்டர்நெட் மூலம்
நிச்சயம் செய்யப்படுகின்றன என்பதே முழு உண்மை.
திறமையும் சற்று ஏமாற்று திறனும் இருந்தால் ஒரு
நோஞ்சான் கூட எத்தனை பெண்களை வேண்டுமானாலும்
இப்போது மணம் புரிய இயலும்.
அமீர்கான் என்ற ஒரு மும்பை பேர்வழி 50 பெண்களுக்கு மேல்
ஏமாற்றி திருமணம் புரிந்து கொண்டான் என்பது செய்தி அல்ல
ஒரு முழு அதிர்ச்சி. இவன் பேச்சில் மயங்கி இவனை
மணந்தவர்கள் 150- கும் மேல் நீளும் என்கிறது இன்றைய செய்தி.
பெரும்பாலான பெண்கள் மெத்த படித்தவர்கள்.
சில பெண்கள் பெற்றோரையும் புறம் தள்ளி விட்டு 
இவன் பேச்சில் மயங்கி திருமணம் புரிந்து, ஹனிமூன் முடிந்து 
கணவன் - மனைவியாய் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது 
நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது 
முழுக்க முழுக்க உண்மையாகும்.
மணம் புரிய இருக்கும் பெண்களை இவன் தேர்வு 
செய்யும் முறை மிகவும் அலாதியானது.
குடும்ப பிரச்சினை உள்ள பெண்கள் 
குடும்ப சுமை உள்ள பெண்கள் 
பெற்றோரை விட்டு விலகி இருக்கும் பெண்கள் 
கணவனால் கை விடப்பட்ட பெண்கள் 
இளம் விதவை பெண்கள் 
சற்று வயதான பணக்கார பெண்கள் 
எளிதில் இவன் விரிக்கும் வலையில் வீழ்கின்றனர்.
இவன் வலை விரிப்பது இருக்கட்டும் 
இவன் வலையில் இந்த பெண்கள் எப்படி இவ்வளவு 
எளிதாக விழுகின்றனர்.
வாழ்வு கேள்விக்குறியாகும் என்று உள்ளுணர்வு உணர்த்தியும் 
இந்த விபரீத விளையாட்டில் இந்த இளம் பெண்கள் 
இறங்குவது ஏன்?
தேவை ஒரு ஆண் துணை என்பதாலா?
வெறுமையாகிவிட்ட தங்கள் வாழ்வில் வசந்தம் 
மீண்டும் வீசும் என்பதாலா?
கேள்விக்குறி ஆகிவிட்ட தங்கள் வாழ்க்கையை 
மீண்டும் சீர் செய்ய இயலும் என்பதலா?
பிரிந்து வாழும் கணவனை தண்டிப்பதற்காகவா?
அல்லது எளிதில் விவாக ரத்து பெற்று 
விடலாம் என்ற தைரியத்தாலா ?
திருமணத்தை ஒரு வேடிக்கை - விளையாட்டாய் 
எடுத்து கொண்ட காரணத்தாலா?
"காதல் என்பது எது வரை 
கல்யாண காலம் வரும் வரை, 
கல்யாணம் என்பது எது வரை 
கழுத்தில் தாலி விழும் வரை"

எங்கேயோ, எப்போதோ கேட்ட பாடல் வரிகள் 
அர்த்தம் அன்று புரியவில்லை 
இன்று புரிகிறது.

 

OVER - SEXED WIFE AND THE MURDERER HUSBAND

செக்ஸ் உணர்வு அதிகம் கொண்ட மனைவியும் கொலை வெறி கொண்ட கணவனும்

தனி மனித ஒழுக்கம் சமூகத்தை மேம்படுத்தும் என்பது நியதி.
ஆனால் தனிமனித ஒழுக்க கேடு எந்த அளவுக்கு ஒரு குடும்பத்தை 
பாதித்து கொலை செய்யும் அளவுக்கு ஒரு கணவனை தூண்டியிருக்கிறது 
என்பதே இந்த செய்தியின் சாரம். தமிழகத்தின் கலாச்சாரமும் 
பண்பாடும் சமீப காலங்களில் மிகவும் தரம் தாழ்ந்து விட்டது என்பது  
சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கருத்தாகும்

காதலித்து கரம் பிடித்த இளம் மனைவி அவள்.
காம மோகமும் அதிகம் கொண்டவள்.
மொபைலில் ஆண்-பெண் உறவு படங்களை அதிகம் 
பார்த்து ரசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவள்.
பார்த்து ரசித்த சம்பவங்களை தன் காதல் கணவனோடு 
பங்கிட்டு கொள்ள துடிக்கும் இளம் மனைவி.
மனைவியின் இளமை துடிப்புக்கு ஈடு கொடுக்க இயலாமல் 
தவிக்கும் வீரியம் குறைந்த ஆண் மகன் இவன்.
மனைவியின் அபரிதமான காம லீலைகளுக்கு  தீனி போட 
இயலாத கணவனை "ஆண்மையற்றவன்" என்று மனைவி 
தீர்ப்பு வழங்கினால் இவன் என்ன செய்வான்.
கணவனை ஏளனம் செய்த மனைவி தன் அந்தரங்க 
தேவைகளை நிறைவு செய்ய வேறு ஒருவனை 
தேர்வு செய்தாள். புதியவனோடு சல்லாபம் செய்வதையே 
தினமும் கடமையாக கொண்டாள் இவள். 
பாதை மாறி செல்லும் மனைவியை திருத்த முயன்றான் இவன்.
அவளோ கேலி செய்தாள் - வசை பாடினாள்.
எதுவும் இனி செய்ய இயலாது - மனைவியை மாற்ற இயலாது 
என்று கண்டு கொண்ட கணவன் 
மனைவியை ஒரு நாள் ஆசை ததும்ப அழைத்தான்.
புதிய சுகம் தருவான் "கணவன்" என்று வந்தாள் அவள்.
சொர்க்கத்தை காட்டுகிறேன் என்று அவன் சொன்னதை 
பேதை இவள் நம்பினாள். தன் மானத்தை காக்க தன் 
கரங்களினாலேயே தன் காதல் மனைவியை கழுத்தை 
நெரித்து கொன்றான் இவன்.
இது சினிமா விமர்சனம் அல்ல.
நம் தமிழ் நாட்டில் நடந்த உண்மை சம்பவம்.
இரு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி.
இந்த வினோத விபரீதங்கள்
எதனால் - எதனால் - எதனால்?

இப்போது செய்தியை படித்து பாருங்கள்  

  

Sunday, June 10, 2012

"FALL" - IN - LOVE

 புதுமை  உலகில் 

காதல் - ஏமாற்றமா அல்லது  தடுமாற்றமா 

காதல்  புனிதமானது - களங்கம் அற்றது  என்ற சொல் எல்லாம் 
இன்று அர்த்தமற்று போய் விட்டது .
காதல் - காதல் - காதல், அது போயின் சாதல் - சாதல் - சாதல் 
என்று என்றோ ஒரு கவிநன் சொல்லி வைத்தான்.
அது எத்துனை உண்மை என்பது இப்போது தான் புரிகிறது.
காதலிப்பது - உடலின்பத்தை முழுக்க அனுபவிப்பது, பின் 
காதலியை அல்லது காதலனை கொன்று விடுவது என்பது 
இன்றைய இளைனர்,இளைனிகளின் கலாச்சாரமாகி விட்டது.
ஒரு பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் காதல் விஷயங்களை 
வெளியில் சொல்வதற்கு பெண்கள் கூச்சப்படுவர், தாய் - தந்தையரிடம் 
கூட அது பற்றி பேச தயங்குவர். ஆனால் இப்போது திருமணம் 
நிச்சயம் ஆன பெண்கள் கூட, தயங்காமல் காதலர்களுடன் 
ஓடி போய் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது சரியா அல்லது  தவறா என்ற விவாதம் தேவை அற்றது.
இது எதனால் என்பதே கேள்வி.












I thank "Thina Thanthi" because I have collected all these informations
from that daily only.
This informations reflect the cultural aspect of our society
to the external world

















Friday, June 1, 2012

DEAD WITH LOVE

THE LOVE-HATE RELATIONSHIPS

Reading news gives no thrill nowadays. killings and suicides never make people panic.
parents killing children, children killing their parents, wives killing their husbands,
husbands killing their wives, employers killing their servants,servants killing their
employers and lovers killing themselves  for the sake of love have become
common happenings in our day- to-day life.

"life has meaning only in death,
it is better to be killed by the loved one's than others"

PARENTS ARE KILLED BY THE SON


HUSBAND KILLED HIS WIFE BECAUSE SHE IS AGED


A WIFE WAS BURNT TO DEATH BY HER HUSBAND


A LOVER COMMITTED SUICIDE WHEN MARRIAGE FAILED


HUSBAND COMMITTED SUICDE WHEN WIFE SCOLDED HIM


CAR DRIVER KILLED THE OWNER UNDER THE
INFLUENCE OF ALCOHOL