Sunday, March 4, 2012

OUR BELOVED TEACHERS - tamil

நமது காதல் ஆசிரியர்கள்

ஆசிரியர்களை பற்றி நமது சமுதாயம் மிகவும்  உயர்ந்த
மதிப்பீடுகளை வழங்கி வந்தது. ஆனால் இன்றைய நிலை
தலை கீழாக மாறிவிட்டது.
மாதா-பிதா-குரு-தெய்வம்
என்று தமிழ் சமுதாயம் வழங்கி வந்த கவ்ரவம்
ஆசிரிய பெருமக்களின் செயல் பாட்டினால் தகர்ந்து விட்டது.
பாடம் சொல்லி தரும் ஆசிரியர்கள் இப்போது
வகுப்பு அறைகளில் எதை சொல்லி தருகிறார்கள்.


ஆசிரிய பெருமக்களின் நடத்தை மற்றும் ஒழுக்கம்
இந்த அளவுக்கு சீரழிந்து போனதற்கு காரணம் என்ன.
மாணவர்களின் ஒழுக்கத்திற்கு அரணாக, பாதுகாவலாக
திகழ வேண்டிய ஆசிரியர்கள் இவ்வாறு வேறுபட்டு நிற்பது ஏன்.
இந்த இளைய மாணவ சமுதாயத்தை இது போன்ற
கலாச்சார சீரழிவிலிருந்து காப்பது எப்படி.


_______________________________________________________________



பேராசிரியரின் விபரீத ஆசைகள்


டியூசன் படிக்க வந்த மாணவியை பள்ளி அறைக்கு
அழைத்து உல்லாசம் அனுபவித்த பேராசிரியர்
"தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"
என்று மாணவியை சக நண்பர்களுக்கும்  விருந்தாக்கிய
இந்த காதகனை காமுகன் என்பதா அல்லது
பிதாமகன் என்பதா.
கல்லூரி பேராசிரிய பெருமக்களை நினைத்தால்
இப்போது நெஞ்சு பதைக்கிறது.


நான் படித்த காலங்களில் எனக்கு கல்வி புகட்டிய அந்த
ஆசிரிய பெருமக்களை இப்போது நினைத்தாலும் மனம்
இன்புறுகிறது.
அந்த கோபுர கலசங்கள் எங்கே, இந்த குப்பை கூளங்கள் எங்கே.
பண்பாடில்லாத பட்டங்களால் பயன் ஏது.
பால் சுரப்பதாலேயே பன்றியின் பால் பசும்பால் ஆகாது.
இவர்களை இனிமேல் எப்படி பேராசிரியர்  என்று அழைப்பது 


No comments:

Post a Comment